ஜல்லிக்கட்டு: தென்னிந்திய நடிகர் சங்கம் உண்ணாவிரதம் போராட்டம்

Last Updated : Jan 18, 2017, 04:59 PM IST
ஜல்லிக்கட்டு: தென்னிந்திய நடிகர் சங்கம் உண்ணாவிரதம் போராட்டம் title=

ஜல்லிக்கட்டு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் வரும் 20-ம் தேதி உண்ணாவிரதம் போராட்டம்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்; ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும். பீட்டாவை உடனடியாக தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் முன் வைத்து போராடி வருகின்றனர். 

ஐடி ஊழியர்கள், வணிகர்கள், திரைத்துறையினர் மற்றும் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போது தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வரும் 20-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். மேலும் ஜல்லிக்கட்டு ஆதரவாக போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு நாங்கள் ஆதரிப்போம் என பொன்வண்ணன் கூறினார். அவருடன் விஷால், எஸ்.வி சேகர் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் பிரநிதிகள் உடனிருந்தனர்.

Trending News