டிடிவி, செந்திலை கைது செய்ய இடைக்கால தடை!

டிடிவி தினகரன் மற்றும் நடிகர் செந்தில் அவர்களை கைது செய்ய வரும் அக்டோபர் 4-ஆம் தேதி வரை மதுரை உயர்நீதிமண்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

Last Updated : Sep 19, 2017, 02:25 PM IST
டிடிவி, செந்திலை கைது செய்ய இடைக்கால தடை! title=

மதுரை: டிடிவி தினகரன் மற்றும் நடிகர் செந்தில் அவர்களை கைது செய்ய வரும் அக்டோபர் 4-ஆம் தேதி வரை மதுரை உயர்நீதிமண்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசியபோது, திருச்சி எம்.பி.பி.குமார் பற்றி அவதூறாக பேசியதாக நடிகர் செந்தில் மீதும், டிடிவி தினகரன் தூண்டுதலின் பேரிலே இவர் இப்படி பேசுகிறார் என டிடிவி தினகரன் மீதும் அவதூரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கினை தள்ளுபடி செய்யக்கோறி நடிகர் செந்தில் மனுதாக்கள் செய்தார். இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் டி.டி.வி.தினகரன், நடிகர் செந்தில் ஆகியோரை வரும்  அக்டோபர் 4-ஆம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிடப் பட்டுள்ளது

Trending News