'சுவாதி ஆப்' புதிய அப்ளிகேஷன் விரைவில் அறிமுகம்!

Last Updated : Jul 14, 2016, 12:45 PM IST
'சுவாதி ஆப்' புதிய அப்ளிகேஷன் விரைவில் அறிமுகம்! title=

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பெண்களின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு ரெயில்களில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் 'சுவாதி ஆப்' என்ற மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை ரெயில்வே பாதுகாப்பு படை அறிமுகப்படுத்த உள்ளது.

ரெயில்வே பாதுகாப்பு படையுடன் இணைந்து கொலையான இளம்பெண் சுவாதி பணிபுரிந்த இன்போசிஸ் நிறுவனமும் இந்த ஆப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ரெயிலில் பயணிக்கும் பெண்கள் தங்களுக்கு ஆபத்து நிகழும் நேரத்தில் இந்த அப்ளிகேஷனில் உள்ள sos பட்டனை அழுத்தினால் உடனடியாக அந்த தகவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் அருகிலுள்ள ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கும் கிடைக்குமாறு வடிவமைக்கப்பட்டு வருகிறது.

டெல்லியில் கொடூரமாக கற்பழித்து கொல்லப்பட்ட நிர்பயா பெயரில் பெண்கள் பாதுகாப்பிற்காக ஒரு மொபைல் அப்ளிகேஷன் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News