கனமழை காரணமா 5 மாவட்டங்களில் விடுமுறை; தேர்வுகள் ஒத்திவைப்பு...

கனமழை காரணமா ஐந்து மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 22, 2018, 10:08 AM IST
கனமழை காரணமா 5 மாவட்டங்களில் விடுமுறை; தேர்வுகள் ஒத்திவைப்பு... title=

கனமழை காரணமா ஐந்து மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை....

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 தினங்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. பல்வேறு இடங்களில் நேற்று தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. 

இந்நிலையில் கனமழை காரணமாக சென்னையில் இன்ற பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று காஞ்சி, திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

மேலும் திருவாரூர், புதுசேரியில், மற்றும நாகை மாவட்ட வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர் மழை காரணமாக சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட இன்றைய தேர்வுகளின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். 

 

Trending News