ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து 15,000 கன அடியாக உயர்வு!!

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்ததால் பரிசல்களை இயக்க, குளிக்க தடைவிதிப்பு!  

Last Updated : Jun 30, 2018, 01:30 PM IST
ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து 15,000 கன அடியாக உயர்வு!! title=

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்ததால் பரிசல்களை இயக்க, குளிக்க தடைவிதிப்பு!  

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சுற்றுலா தளங்களான ஒகேனக்கல், கோவை குற்றாலம், குற்றாலம் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தொடர்ந்து தடை விதித்து வருகிறது.  

ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து 15,000 கன அடிக்கு மேல் வருவதால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளது. 

 

Trending News