அவசரச்சட்டத்திற்கு உள்துறை அமைச்சகம் விரைவில் ஒப்புதல்

Last Updated : Jan 20, 2017, 01:22 PM IST
அவசரச்சட்டத்திற்கு உள்துறை அமைச்சகம் விரைவில் ஒப்புதல்  title=

ஜல்லிக்கட்டுக்கான அவசரச்சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உறுதியளித்துள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது. நேற்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். இச்சந்திப்பில் திருப்திகரமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்று போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர். இதனால், ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசே அவசரச்சட்டத்தை இயற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கான அவசரச்சட்டம் தொடர்பாக அதிமுக எம்.பி.க்கள் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தனர். 

தமிழக அரசு அவசரச்சட்ட வரைவிற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதற்கு உள்துறை அமைச்சகம் ஜல்லிக்கட்டுக்கான அவசரச்சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் அளிப்பதாக உறுதியளித்துள்ளதாக ராஜ்நாத் சிங்கை சந்தித்த பின் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

Trending News