கனமழை எதிரொலி! முத்துநகர் எக்ஸ்பிரஸ் நிறுத்தம்!

கனமழை காரணமாக தூத்துக்குடி மற்றும் நெல்லையில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Last Updated : Mar 14, 2018, 09:21 AM IST
கனமழை எதிரொலி! முத்துநகர் எக்ஸ்பிரஸ் நிறுத்தம்! title=

கனமழை காரணமாக தூத்துக்குடி மற்றும் நெல்லையில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்திய பெருங்கடல் பகுதியில் குமரிக்கு தெற்கே, மாலத்தீவு அருகே நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று லட்சத்தீவை நோக்கி நகரும்.

இதனால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் 14, 15-ம் தேதி அநேக இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.

கனமழையால் குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்ட சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தண்டவாளத்தை மழை நீர் சூழ்ந்துள்ளதால் தூத்துக்குடி செல்லும் முத்துநகர் ரயில் நிலையத்துக்கு ஒரு கி.மீ. தூரத்தில் உள்ள மேலூரில் நிறுத்தப்பட்டுள்ளது.

Trending News