எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஏற்பட்ட தீ! 7 பேர் பலி!

செகந்திராபாத்தில் ஏற்பட்ட திடீர் பயங்கர தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Sep 13, 2022, 08:23 AM IST
  • எலக்ட்ரிக் வாகனம் வெடித்து விபத்து.
  • ஹோட்டலில் தங்கி இருந்தவர்கள் உயிரிழப்பு.
  • பலி எண்ணிக்கை 8 ஆகா உயர்வு.
எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஏற்பட்ட தீ! 7 பேர் பலி! title=

ஹைராபாத்தில் உள்ள செகந்திராபாத்தில் உள்ள ரூபி ஹோட்டல் கட்டிடத்தின் பாதாள அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. எதிர்பாராத விதமாக நடந்த இந்த தீ விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  கட்டிடத்தில் உள்ள ஹோட்டல் அறைகளில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் தீயில் கருகி உயிரிழந்தனர்.  

மேலும் படிக்க | சென்னையில் 537 லாட்ஜ், மேன்ஷன்களில் காவல்துறை அதிரடி சிறப்பு சோதனை 

ஹோட்டலின் பாதாள அறையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மின்சார பைக்கில் இருந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  இந்த தீ கட்டிடத்தின் மேல் தளம் வரை அடர்ந்த புகையாக பரவியது.  இதனால் ஹோட்டல் அறைகளில் தங்கி இருந்த சுற்றுலா பயணிகள் புகை மூட்டத்தால் மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர்.  

பதட்டத்தில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சில சுற்றுலாப் பயணிகள் கட்டிடத்தின் மேலிருந்து குதித்தும் தப்பித்து உள்ளனர்.  தீ அணைத்த தீயணைப்பு படையினர் கட்டிடத்தில் இருந்து பலரை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க | மதுபோதையால் விபத்து - அரசு பேருந்தின் மீது மோதிய ஷேர் ஆட்டோ... சிகிச்சையில் ஓட்டுநர் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News