'நீட்' தேர்வு அச்சம் - திருமணமான 6 மாதத்தில் பெண் மருத்துவர் தற்கொலை!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக திருமணமான 6 மாதத்தில் பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

Written by - Arunachalam Parthiban | Last Updated : May 20, 2022, 10:10 AM IST
  • பெற்றோர் வீட்டில் தங்கி நீட் தேர்வுக்கு தயாராகி வந்த பெண்
  • திருமணமான 6 மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை
  • தற்கொலை குறித்து ஆர்.டி.ஓ தலைமையில் தீவிர விசாரணை
'நீட்' தேர்வு அச்சம் - திருமணமான 6 மாதத்தில் பெண் மருத்துவர் தற்கொலை! title=

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் அபிஷேக். இவர் கோபிசெட்டிபாளையத்தில் ஜவுளி கடை வைத்துள்ளார். அபிஷேக்கிற்கும் காட்டூர் பகுதியை சேர்ந்த மருத்துவர் ராசிக்கும் 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 

2020 ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து முடித்துவிட்டு டாக்டர் பட்டம் பெற்றுள்ள ராசி, அடுத்ததாக முதுகலை மருத்துவப் படிப்பிற்காக நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இதற்கு தயாராகும் வகையில் காட்டூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து ராசி படித்து வந்துள்ளார். கடந்த சில வாரங்களாக நீட் தேர்வு குறித்த அச்சத்தில் இருந்த ராசி மனதளவில் மிகுந்த அழுத்தற்குள்ளாகியிருந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் வீட்டின் மூன்றாவது மாடிக்கு சென்று படிக்கப்போவதாக பெற்றோரிடம் கூறி சென்ற ராசி நீண்ட நேரமாகியும் மதிய உணவுக்கு சாப்பிட வரவில்லை. இதனால் சந்தகமடைந்த அவரது தயார் செந்தாமரை பகல் 3 மணியளவில் 3-வது மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அறைக்கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டியும் திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த செந்தாமரைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 

மேலும் படிக்க | மலையாள நடிகையும் மாடலுமான திருநங்கை ஷெரின் தற்கொலை - வெளிவராத அதிர்ச்சி தகவல்கள்

அறையில் உள்ள மின் விசிறியில் தனது மகள் தூக்கியில் தொங்கியவாறு சடலமாக கிடந்தை பார்த்து கதறி அழுதுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

திருமணமான 6 மாதத்தில் பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்டதால் இது தொடர்பாக ஆர்.டி.ஓ தலைமையில் விசாரணை நடைபெற உள்ளது. இதனிடையே குடும்ப பிரச்சனை காரணமாக ராசி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? எனும் கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற கீழ்காணும் எண்ணை தொடர்பு கொள்ளவும். மாநில உதவிமையம்: 104

மேலும் படிக்க | ஜிஎஸ்டி: மத்திய அரசுக்கு உள்ள உரிமை மாநில அரசுகளுக்கும் உண்டு - உச்சநீதிமன்றம் அதிரடி.!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News