பராமரிப்பு காரணமாக சென்னையில் மின்வெட்டு -உங்கள் பகுதியில்?

பராமரிப்பு பணி காரணமாக நாளை சென்னையின் சில பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது!

Last Updated : Apr 29, 2019, 10:56 PM IST
பராமரிப்பு காரணமாக சென்னையில் மின்வெட்டு -உங்கள் பகுதியில்? title=

பராமரிப்பு பணி காரணமாக நாளை சென்னையின் சில பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது!

மின்சார வாரியதின் இந்த அறிவிப்பின் படி நாளை காலை 09.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை (7 மணி நேரம்) கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது" என்று தெரிவித்துள்ளது.

சின்மயா நகர் பகுதி: மேற்கு நடேஷன் நகர், நடேஷன் நகர் ஒரு பகுதி, காளியம்மன் கோயில் தெரு ஒரு பகுதி, இளங்கோ நகர், ஏரிக்கரை தெரு, பச்சையம்மன் கோயில் தெரு, எல் & டி காலனி, தாராசந்த் நகர், வெங்கடேஷா நகர் பகுதி, சேக் அப்துல்லா நகர், சாதிக் பாஷா நகர், இந்திரா நகர், பெரியார் நகர், காந்தி நகர், மேட்டு குப்பம் லட்சுமி நகர் பகுதி, விருகம்பாக்கம் ஒரு பகுதி, சின்மயா நகர், ஆழ்வார்திருநகர் பகுதி, சாலிகிராம் பகுதி.

நொலம்பூர் பகுதி: என்.என்.எஸ்., எச்.ஐ.ஜி., எம்.ஐ.ஜி, சின்ன நொலம்பூர், அடையாளம்பட்டு, கொங்கு நகர், முகப்பேர் மேற்கு விளாக் 1 முதல் 8 வரை, ராஜா கார்டன், பன்னீர் நகர், மோகன்ராம் நகர், ஜஸ்வந்த் நகர், ரெட்டிபாளையம் பகுதி, ஏ.ஐ.பி.இ.ஏ.நகர், வெள்ளாளர் தெரு,  ஏரி திட்டம்,  கங்கை அம்மன் நகர், பொன்னியம்மன் நகர், கீழ் அயனம்பாக்கம்,

மாலை 4.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்சாரம் திரும்ப அளிக்கப்படும்.

Trending News