வெள்ளலூர் பேருந்து நிலையத்தை மாற்றினால் உண்ணாவிரதம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கோவையில் அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட வெள்ளலூர் பேருந்து நிலையத்தை மாற்றினால், தொடர் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 24, 2022, 09:51 PM IST
  • கோவையில் எடப்பாடி பழனிசாமி
  • திமுக அரசு மீது சரமாரி குற்றச்சாட்டு
  • உண்ணாவிரதம் இருப்பேன் என அறிவிப்பு
வெள்ளலூர் பேருந்து நிலையத்தை மாற்றினால் உண்ணாவிரதம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு  title=

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அம்மாவின் ஆட்சி இருக்கும் பொழுது கோவை மாவட்டத்திற்கு மாநகராட்சிக்கும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்தார். திமுக அரசு பொறுப்பேற்றவுடன் அதிமுக கொண்டு வந்த திட்டங்களை முடக்குவதும் ரத்து செய்வதுமாக உள்ளதாக தெரிவித்தார். கோவை மாநகராட்சியில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சுமார் 150 கோடி மதிப்பில் 500க்கும் மேற்பட்ட பணிகளை ரத்து உள்ளதாகவும் தெரிவித்தார். 

திமுக ஆட்சியில் 133பணிகளுக்காக 18 சதவிகிதம் கமிஷன் கேட்டதால் எந்த ஒப்பந்ததாரரும் பணியை எடுப்பதற்கு முன்வரவில்லை என தெரிவித்தார். வெள்ளலூர் பேருந்து நிலையத்தை பொருத்தவரை 50 சதவிகித பணிகள் நிறைவடைந்த நிலையில் அதனையும் இந்த அரசு கைவிட இருப்பதாக தெரிவித்தார். தமிழக முதல்வருக்கு நெருக்கமான ரியல் எஸ்டேட் எல் அண்ட் டி சாலையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளதால் வெள்ளலூர் பேருந்து நிலையத்தை அங்கு மாற்றினால் அங்குள்ள நிலங்கள் அனைத்தும் அதிக விலை போகும் என்பதால் தான் பேருந்து நிலையத்தை மாற்றுவதற்கு காரணம் என தெரிவித்தார். இதனால் மக்களுடைய வரி பணம் வீணடிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். 

வெள்ளலூர் பேருந்து நிலையத்தை மாற்ற முற்பட்டால் மாநகராட்சியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார். மெட்ரோ ரயில் திட்டத்தையும் கிடப்பில் போட்டுள்ளதாக தெரிவித்த அவர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தையும் கிடப்பில் போட்டுள்ளதாக தெரிவித்தார். அத்திக்கடவு அவிநாசி திட்டம் நான்கு மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டு இருக்க வேண்டும் எனக் கூறிய அவர் இந்த அரசின் மெத்தன போக்கினால் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதாக தெரிவித்தார். 

மேலும், எந்த திட்டத்தையும் இவர்கள் முழுமையாக நிறைவேற்ற வில்லை எனவும் கூறினார். மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மேற்கு புறவழிச் சாலைக்காக நிலம் எடுக்கும்  பணிகள் தனது ஆட்சியில் வேகமாக செயல்பட்டு வந்ததாக கூறிய அவர் ஆட்சி மாற்றம் வந்தவுடன் அதுவும் கிடப்பில் போடப்பட்டு விட்டதாக தெரிவித்தார். மேலும் மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டமும் கிடப்பில் போட்டு விட்டதாக கூறினார். கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கும் போதுமான நிதி ஒதுக்காத காரணத்தினால் அதுவும் முடங்கி இருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். 

ஆனைமலை நல்லாறு திட்டமும் கேரளா அரசு உடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படாத அரசாங்கமாக இந்த அரசாங்கம் உள்ளது என தெரிவித்தார். மேலும் மின்கட்டண உயர்வு கைவிடப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்கும் பொழுது கூறிய பெட்ரோல் டீசல் விலை  குறைப்பு, பழைய ஓய்வூதிய திட்டம் முதியோர் ஓய்வூதிய உயர்வு இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் திட்டம், 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தாமல் உள்ளதாக கூறினார். 

மேலும், திமுக ஆட்சியில் எதற்கெடுத்தாலும் குழு அமைக்கப்படுவதாக தெரிவித்த அவர் இதுவரை 38 குழுக்கள் அமைத்து சரித்திரத்தை படைத்துள்ளதாக தெரிவித்தார். ஒருவேளை இந்த 38 குழுக்களையும் கண்காணிப்பதற்கும் ஒரு குழு அமைக்கப்படும் என விமர்சித்தார். தற்பொழுது சட்ட ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டதாகவும் எங்க பார்த்தாலும் போதைப் பொருள் தாராளமாக கிடைப்பதாக கூறினார். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை ரத்து செய்யாமல் உள்ளதாக தெரிவித்த அவர் சூதாட்டத்திற்கு கருத்து கேட்பு கூட்டம் நடக்கும் அரசாக இந்த அரசு உள்ளதாக தெரிவித்தார். இதற்கான தக்க பாடத்தை அடுத்த தேர்தலில் மக்கள் புகட்டுவார்கள் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, இந்த அரசாங்கம் கும்பகர்ணன் போல் தூங்கி கொண்டிருப்பதாகவும் அதனை நாங்கள் தட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறோம் எனவும் கூறினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி திமுகவில் இணைந்தது குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், அவரை நம்பி அதிமுக கட்சி இல்லை எனவும் ஒன்றரை கோடி தொண்டர்களை நம்பித்தான் அதிமுக செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். டிடிவி தினகரன் அமலாக்கத்துறையில் இருந்து முதலில் அவரை காப்பாற்றட்டும் என தெரிவித்தார். 

தொண்டர்-சாதாரண மக்கள் உட்பட அனைவரும் என்னை வந்து சந்திக்கலாம் என தெரிவித்த அவர், ஸ்டாலின் யாரை சந்திக்கிறார் என கேள்வி எழுப்பினார். ஆறுகுட்டி அதிமுகவில் இருந்தார் தற்பொழுது ஆளும் கட்சியாக திமுக இருந்து வருவதால் வேடந்தாங்கல் பறவை போல் அவர் தாவி உள்ளார் எனவும் சாடினார். 

மேலும் படிக்க | சாலையோரம் வீசப்படும் பச்சிளம் குழந்தைகள் - உண்மையில் இதன் உளவியல் பிரச்சனைகள்தான் என்ன ?

மேலும் படிக்க | ’அடக்குமுறையை மீறி வளர்ந்தவன்’ கோவை அரசு விழாவில் முதலமைச்சர் கர்ஜணை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News