40 தொகுதிகளுக்கு குறி; நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் திமுக - ஸ்டாலின் போட்ட கட்டளை

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் திமுக வெற்றி பெற வேண்டும் என கட்சியினருக்கு ஸ்டாலின் கட்டளை இட்டுள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 16, 2022, 11:33 AM IST
  • விருதுநகரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழா
  • தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் போட்ட கட்டளை
  • 40 தொகுதிகளையும் வெல்ல வேண்டும் என அறிவுறுத்தல்
40 தொகுதிகளுக்கு குறி; நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் திமுக - ஸ்டாலின் போட்ட கட்டளை title=

விருதுநகர் அருகே பட்டம்புதூரில் திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்  தலைமை தாங்கினார். விழாவில் வருவாய்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வரவேற்புரையாற்றினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய ’திராவிட மாடல்’ புத்தகத்தை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட, கழக பொருளாளர் டி.ஆர்.பாலு பெற்றுக்கொண்டார்.

டி.ஆர்.பாலு - துரைமுருகன் பேச்சு 

விழாவில் நன்றியுரையாற்றிய டி.ஆர்.பாலு, கலைஞர் விருதை பெற்றுக் கொண்டது மகிழ்சிளிப்பதாக தெரிவித்தார். வரும் காலங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பணியாற்றுவேன் என பேசினார். அதனை தொடர்ந்து பேசிய துரைமுருகன், திமுக ஆட்சி அமைத்து ஒராண்டு காலம் யாரும் குறை சொல்ல முடியவில்லை. கட்சியையும்,  ஆட்சியையும் ஒருங்கே நடத்துவது என்றால் அது சாதாரண காரியம் இல்லை. அந்த திறமையை முதல்வர் ஸ்டாலின் பெற்றுள்ளார். குடியரசுத்தலைவரை தேர்ந்தெடுக்கும் திறமை கலைஞர் பெற்றிருந்தார். இன்னும் 60 ஆண்டு காலத்திற்கு ஆட்சிக்கும்  கட்சிக்கும் பயமில்லை என பேசினார்.

மேலும் படிக்க | குழந்தைகளுக்கு உணவு ஊட்டி மகிழ்ந்த முதலமைச்சர்; காலை உணவு திட்ட தொடக்க விழா புகைப்படங்கள்

ஸ்டாலின் போட்ட கட்டளை

திமுக முப்பெரும் விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்தி திணிப்பை ஏற்க முடியாது எனத் தெரிவித்தார். 40/40 வெற்றியை நாம் வரும் பாராளுமன்ற தேர்தலில் பெறவேண்டும். அதற்கு விருதுநகர் முப்பெரும் விழா தொடக்கமாக அமையட்டும் என பேசினார். கலைஞர் ஒரு சில கடிதம் எழுதி ஆட்சியையே பிடிப்பார். ஒரு சில கடிதம் எழுதி சர்வாதிகார ஆட்சியை ஒழிப்பார். காமராஜர் ஆட்சி, கலைஞர் ஆட்சி, அம்மா ஆட்சி, ஸ்டாலின் ஆட்சி என எந்த ஆட்சியையும் திராவிட ஆட்சி தான் என்று கூற வேண்டும். இளைய சமுதாயத்தின் மனதில் விதைக்கவே இந்த  திராவிட மாடல் புத்தகம். நான் கட்சிக்காரன் அல்ல கொள்கைகாரன். பட்டினி சாவு இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது. இனி தமிழகத்தை நிரந்தமாக திமுகதான் ஆளும் என பேசினார்.

மேலும் படிக்க | காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News