திமுக நிர்வாகி வெட்டிக் கொலை - மர்ம கும்பல் வெறிச்செயல்! விரைந்து சென்ற அமைச்சர்

சென்னைக்கு அருகே வண்டலூரில் திமுக ஒன்றிய துணை தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பிச் சென்ற கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 29, 2024, 10:30 PM IST
  • சென்னையில் திமுக நிர்வாகி கொலை
  • நாட்டு வெடிகுண்டு வீசி வெறிச் செயல்
  • மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழப்பு
திமுக நிர்வாகி வெட்டிக் கொலை - மர்ம கும்பல் வெறிச்செயல்! விரைந்து சென்ற அமைச்சர் title=

வண்டலூரை சேர்ந்த காட்டாங்குளத்தூர் ஒன்றிய துணை தலைவரும், திமுக ஒன்றிய செயலாளருமாக இருப்பவர் ஆராமுதன். அவர் இரவு கட்சி அலுவலகத்திற்கு காரில் வந்துள்ளார். அப்போது, திடீரென மர்ம நபர்கள் ஆராமுதன் வந்த கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசியும், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியும் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

ரத்தவெள்ளத்தில் இருந்த அவரை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஆராமுதன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து வண்டலூர் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கையாக 70க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | தமிழகத்தில் அண்ணாமலையை பூதக்கண்ணாடி ஸ்பீக்கர் போட்டு காட்டுகிறீர்கள்-கார்த்திக் சிதம்பரம்

கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர். உயிரிழந்த திமுக கழக ஒன்றிய குழு துணை தலைவர் ஆராமுதன் உடலை பார்ப்பதற்க்கு அமைச்சர் தாமோ அன்பரசன் மற்றும் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்டோர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். காலையில் வண்டலூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் தாமோ அன்பரசனுடன் இருந்துள்ளார் ஆராமுதன். அவரின் தீவிர ஆதரவாளராகவும் இருந்தவர்.

இன்று காலை முதலே ஆராமுதன் செல்லும் இடங்களை எல்லாம் நோட்டமிட்டுக் கொண்டிருந்த  மர்ம கும்பல் இரவு நேரத்தில் இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது. காரில் சென்றவர் தப்பித் விடக்கூடாது என்பதற்காகவே, சரியாக திட்டமிட்டு நாட்டு வெடி குண்டு வீசி நிலைகுலையச் செய்து,  அதன்பிறகு ஆராமுதனை கொலை செய்திருக்கிறது அந்த கும்பல். கொலையாளிகளை பிடிக்கும் நோக்கில் அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். அத்துடன் ஆராமுதனுக்கு யாருடன் எல்லாம் முன்பகை இருந்தது என்ற தகவலையும், மற்ற காரணங்களையும் காவல்துறை விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது. 

மேலும் படிக்க | அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்கு - நீதிமன்றம் சரமாரி கேள்வி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News