வாக்களிக்க வந்தவரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட்

வாக்களிக்க வந்த பெண் வாக்காளரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Last Updated : Apr 19, 2024, 02:55 PM IST
  • திமுகவின் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டியுள்ளார்.
  • இந்த வாக்கு மையமானது பரபரப்பாக காணப்படுகிறது.
வாக்களிக்க வந்தவரிடம் திமுகவிற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டிய திமுக பூத் ஏஜென்ட் title=

18வது மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 102 தொகுதிகளில் இன்று தேர்தல் அமோகமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 39 மக்களவை தொகுதிகளிலும், கன்னியாகுமரியில் விளவங்கோடு தொகுதியிலும் இன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஆளும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி மற்றும் அதிமுகவின் கூட்டணி என மும்முனை போட்டி தமிழ்நாட்டில் நிலவுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு இயந்திரங்கள் பொருத்தும் பணிகள் நேற்று நிறைவடைந்த நிலையில், வாக்காளர்கள் எவ்வித தொந்தரவும் இன்றி வாக்குச் செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | மக்கள் மனதில் உற்சாகம், நம்பிக்கை, எதிர்பார்ப்பு.... தொடங்கியது தேர்தல் திருவிழா!!

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவினை காலை முதல் தமிழகத்தில் வாக்காளர்கள் செய்து வரும் நிலையில் வடசென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தியாகராஜா கல்லூரியில் வாக்காளர்கள் வாக்கு செலுத்த வந்து கொண்டிருக்கின்றனர் இந்த வாக்கு மையத்தில் அமைந்துள்ள மூன்றாம் எண் கொண்ட வாக்குச்சாவடியில் பெண் வாக்காளர் ஒருவர் தனது அடையாள அட்டைகள் மற்றும் பூத் ஸ்லிப் போன்றவற்றை காட்டிவிட்டு உள்ளே செல்லும்போது திமுக சார்பில் அங்கு பூத் ஏஜென்ட் ஆக அமர்ந்து கொண்டிருந்தவர் திமுகவின் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு சைகை காட்டியுள்ளார்.

இதை பார்த்த அதிமுக ஏஜெண்டுகள் எவ்வாறு அப்படி சைகை காட்டி உள்ளே பிரச்சாரம் செய்து இருப்பது செய்யலாம் இது தேர்தல் விதிமுறைக்கு எதிரானது என்று கூறி அவரை வெளியேற்றுமாறு அதிகாரிகளிடம் முறையிடவே உள்ளே இருந்த அதிகாரிகளோ அப்படியெல்லாம் வெளியேற்ற முடியாது என்று கூறவே வாக்கு பதிவு செய்வதையே நிறுத்த வேண்டும் என்றும் மறியலில் ஈடுபட போகிறோம் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள் அவர்களோடு பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதனால் இந்த வாக்கு மையமானது பரபரப்பாக காணப்படுகிறது.

மேலும் படிக்க | வாக்களிக்க போறீங்களா? அப்போ உடனே இந்த விஷயங்களை கவனியுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News