திருமணம் ஆன 2 ஆண்டுகளில் நடந்த கொடூரம்! குழந்தையுடன் பெண் மரணம் - பின்னணி என்ன?

Crime News: ஒசூர் அருகே வீட்டு தண்ணீர் தொட்டியில் தாய், ஒன்றரை வயது பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Written by - Bhuvaneshwari P S | Edited by - Sudharsan G | Last Updated : Nov 27, 2023, 12:04 PM IST
  • மீனாவுக்கு முனிராஜ் வரதட்சணை கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
  • இருவருக்கும் இதனால் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
  • இது கொலை என மீனாவின் உறவினர்கள் புகார்.
திருமணம் ஆன 2 ஆண்டுகளில் நடந்த கொடூரம்! குழந்தையுடன் பெண் மரணம் - பின்னணி என்ன? title=

Crime News In Tamil: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தொரப்பள்ளி அக்ரகாரம் கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவருக்கும் மீனா என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் வைஷாலி என்ற பெண் குழந்தை இருந்தது. கணவன் முனிராஜ் மனைவி மீனாவிடம் அம்மா வீட்டில் இருந்து வரதட்சணை கேட்டு வாங்கி வரச்சொல்லி தொடர்ந்து சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து இருவரும் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

தண்ணீர் தொட்டியில் சடலங்கள்

இந்த நிலையில் நேற்று முனிராஜ் வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் மீனா மற்றும் அவரது ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த நிலையில் கிடப்பதாக முனிராஜ் உறவினர்கள் ஒசூர் நகர போலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலிசார், தண்ணீர் தொட்டியில் சடலமாக கிடந்த மீனா மற்றும் குழந்தையின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | சமூக நீதியின் அடிப்படை தெரியாமல் அவதூறு பரப்புவதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் சிவசங்கர் கண்டனம்

கொலையா... தற்கொலை...?

தாய், குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சமயத்தில் முனிராஜ் கோவிலுக்கு சென்றதாக கூறப்படுவதால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களாக என்கிற கோணத்தில் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இதற்கு மீனாவின் உறவினர்கள் மறுப்பு தெரிவித்ததோடு, மீனா இறப்பில் சந்தேகம் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். வரதட்சணை கேட்டு முனிராக் தொடர்ந்து மீனாவை துன்புறுத்தி வந்ததாகவும், அவர் தான் மீனாவை கொலை செய்து தற்கொலை போல செட் செய்துவிட்டதாகவும் மீனாவின் பெற்றோர் ஒசூர் நகர போலிசில் புகார் அளித்துள்ளனர். 

விசாரணை தீவிரம்

இதனையடுத்து போலீசார் முனிராஜுடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீனா மரணத்துக்கான காரணம் என்ன என்பது பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே தெரியவரும். திருமணம் ஆன இரண்டு ஆண்டுகளில் இளம்பெண் குழந்தையுடன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | டான்ஸில் கில்லாடிகளா நீங்கள்... ரூ.10 லட்சம் வரை பரிசு - சென்னையில் மாபெரும் நடனத் திருவிழா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News