தமிழகத்தில் சாதிவாரி புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம் அமைப்பு!

தமிழகத்தில் சாதிவாரி புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம் அமைத்துள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 7, 2020, 01:20 PM IST
தமிழகத்தில் சாதிவாரி புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம் அமைப்பு! title=

தமிழகத்தில் சாதிவாரி புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம் அமைத்துள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் முன்னெடுப்பாக சாதிவாரி புள்ளிவிவரங்களை சேகரிக்க தமிழக முதல்வர் (Tamil Nadu CM) ஆணையம் அமைத்துள்ளார். புள்ளி விவரங்களை திரட்டும் பொறுப்பு முன்னாள் நீதிபதி குலசேகரனிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு (TN Govt) தெரிவித்துள்ளது. இந்த ஆணையம் விரைவில் சாதி வாரி புள்ளி விவரங்களை சேகரித்து தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., தமிழ்நாட்டில் (Tamil Nadu) பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு காலக்கட்டங்களில் வைத்து வரும் கோரிக்கைகளின் அடிப்படையிலும், அரசின் பல்வேறு நலத்திட்ட பயன் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டியும், உச்சநீதிமன்றத்தில் (Supreme Court) நிலுவையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்குகளை எதிர்கொள்ளத்தேவையான புள்ளி விவரங்களை பெறுவதற்காகவும், “தற்போதைய நிலவரப்படியான சாதி வாரியான புள்ளி விவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் உரிய தரவுகளை சேகரித்து, அறிக்கை சமர்ப்பிக்க அதற்கென பிரத்யேக ஆணையம் ஒன்று அமைக்கப்படும்” என கடந்த 1.12.2020 அன்று தமிழக அரசால் உத்தரவிடப்பட்டது. 

ALSO READ | சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் அதை அரிசி குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு

இந்த உத்தரவைத் தொடர்ந்து “தற்போதைய நிலவரப்படி சாதிவாரியான அளவிடக்கூடிய முழுமையான புள்ளி விபரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை முடிவு செய்து, அப்புள்ளி விபரங்களைத் திரட்டி அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் குலசேகரனின் தலைமையில் ஆணையம் அமைக்கப்படும்” என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆணையம் உடனடியாக செயல்பாட்டுக்கு வருவதோடு விரைவில் அதன் பணியையும் துவக்கும். 

“சமூக நீதி காத்த வீராங்கனை” அம்மா வழியில் செயல்படும், இவ்வரசு சமூக நீதியை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News