பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு WhatsApp மூலம் பாடம் எடுக்கும் அரசு...

கொரோனா முழு அடைப்பினை தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் உள்ள பள்ளி கல்வித் துறை, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்அப், யூடியூப் மற்றும் கேபிள் டிவி நெட்வொர்க்குகள் மூலம் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியுள்ளது.

Last Updated : Apr 7, 2020, 07:36 PM IST
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு WhatsApp மூலம் பாடம் எடுக்கும் அரசு... title=

கொரோனா முழு அடைப்பினை தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் உள்ள பள்ளி கல்வித் துறை, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்அப், யூடியூப் மற்றும் கேபிள் டிவி நெட்வொர்க்குகள் மூலம் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியுள்ளது.

மாணவர்கள் தங்கள் வாரியத் தேர்வுகளுக்குத் தயாராக வேண்டிய நேரத்தில், முழு அடைப்பு அவர்களது கல்வியை பாதிக்காத வண்ணம் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் செய்திகள் அல்லது அழைப்புகள் மூலம் மாணவர்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்துவதற்காக ஒரு மெய்நிகர் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது என்று பள்ளி கல்வி இயக்குநர் PT ருத்ரா கவுட் தெரிவித்துள்ளார். தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், உயிரியல் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் உள்ளிட்ட அனைத்து பாடங்களின் நிபுணத்துவ ஆசிரியர்களையும் தங்கள் வாட்ஸ்அப் எண்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்பு கொள்ளலாம் எனவும், மாணவர்கள் குறுஞ்செய்திகள், குரல் அல்லது வீடியோ அழைப்புகள் மூலம் தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாடம் தொடர்பான சந்தேகங்களுக்கு மாணவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்...

  • L ஷகிலா (தமிழ்) – 9866728352, 
  • M  ஜான்சி (ஆங்கிலம்) -9944198425, 
  • M தமிழ் (கணிதம்) – 7200918139, 
  • S ராஜ்குமார் (இயற்பியல் அறிவியல்) – 9994203828, 
  • R தேவிகா (உயிரியல்) – 8015423235 
  • P வானதி (சமூக அறிவியல்) – 9994196886

மாணவர்கள் பள்ளி கல்வி இயக்குநரகம் புதுச்சேரியின் யூடியூப் சேனலிலிருந்து படிப்பு பாடங்களையும் படிக்கலாம். ஆசிரியர்கள் சேனலில் பல பாடங்களை வெளியிட்டுள்ளனர் என்று ருத்ரா கவுட் கூறினார்.

பல மாணவர்களுக்கு இணைய அணுகல் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு, படிப்பு பாடங்களும் கேபிள் நெட்வொர்க்குகள் மூலம் ஒளிபரப்பப்படுகின்றன. ஒரு தனியார் சேனல் முன்பே பதிவுசெய்யப்பட்ட வீடியோக்களை ஒளிபரப்புகிறது, அதைத் தொடர்ந்து மாணவர்கள் ஆசிரியர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்கிறார்கள்.

ICT கருவிகளைப் பயன்படுத்தி எதிர்கால ஆன்லைன் கல்விக்கும் இந்தத் துறை திட்டமிட்டுள்ளது. பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரி மற்றும் அடல் அடைகாக்கும் மையத்துடன் இணைந்து பள்ளி கல்வி இயக்குநரகம் “மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை எவ்வாறு நடத்துவது” என்ற வலைநார் ஒன்றை நடத்தியது. இந்த ஆன்லைன் பயிற்சியில் 3660 ஆசிரியர்கள் பங்கேற்றதாக ருத்ரா கவுட் இங்கே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Trending News