கோவையில் 72 லட்சம் மதிப்பீட்டில் சார்பதிவாளர் அலுவலகம்...

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் 30.1.2020 அன்று தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூரில் 72 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடத்தை காணொலிக் காட்சி (Video Conferencing) மூலமாக திறந்து வைத்தார்கள். 

Last Updated : Feb 1, 2020, 06:46 PM IST
கோவையில் 72 லட்சம் மதிப்பீட்டில் சார்பதிவாளர் அலுவலகம்... title=

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் 30.1.2020 அன்று தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூரில் 72 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடத்தை காணொலிக் காட்சி (Video Conferencing) மூலமாக திறந்து வைத்தார்கள். 

மேலும், துவரங்குறிச்சி, மதுக்கரை மற்றும் திருச்செங்கோடு ஆகிய இடங்களில் 2 கோடியே 68 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்கள்.

வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் பதிவுத்துறை அலுவலகங்களில், பதிவு ஆவணங்களைப் பராமரிப்பதற்கும், பணியாளர்கள் திறம்படப் பணியாற்றுவதற்கும், போதிய இடவசதி இல்லாததை கருத்தில் கொண்டும், பொதுமக்கள் அதிகம் வந்து செல்கின்ற சார்பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்களுக்கு தக்க வசதிகள் அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தைக் கருதியும், வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் சொந்த கட்டடங்கள் கட்டும் திட்டத்தினை மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூரில் 72 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடத்தை  தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள். இப்புதிய சார்பதிவாளர் அலுவலகக் கட்டடம், பொதுமக்களுக்கான காத்திருப்பு அறை, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள நடைபாதை, குடிநீர் மற்றும் கழிவறை போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

மேலும், திருச்சிராப்பள்ளி மாவட்டம், துவரங்குறிச்சியில் 94 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரையில் 93 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் 80 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 3 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களை  தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார்கள்.

வணிகவரித் துறையில் 18 உதவி ஆணையர் மற்றும் பதிவுத் துறையில் 7 மாவட்டப் பதிவாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 தேர்வு மூலமாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் 7 நபர்களுக்கு உதவி ஆணையர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளையும், 7 நபர்களுக்கு மாவட்டப் பதிவாளர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தலைமைச் செயலாளர் க.சண்முகம், இ.ஆ.ப., வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மைச் செயலாளர் கா.பாலச்சந்திரன், இ.ஆ.ப., பதிவுத் துறை தலைவர் திருமதி ஜோதி நிர்மலா சாமி, இ.ஆ.ப., வணிகவரி இணை ஆணையர் (நிர்வாகம்) திருமதி எ. சுந்தரவல்லி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Trending News