2024 புத்தாண்டை கருப்பு கொடிகளை ஏற்றி கவலையுடன் வரவேற்ற சென்னை மீனவர்கள்

2024 புத்தாண்டை சென்னை எண்ணூர் மக்கள் கருப்புக்கொடி ஏற்றி வரவேற்றுள்ளனர். அண்மையில் வாயு கசிவு ஏற்பட்ட கோரமண்டல் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 1, 2024, 03:25 PM IST
  • சென்னை எண்ணூரில் மீனவர்கள் போராட்டம்
  • உரத் தொழிற்சாலையை கட்டாயம் மூட வேண்டும்
  • 6வது நாளாக தொடர்ந்து நடைபெறும் போராட்டம்
2024 புத்தாண்டை கருப்பு கொடிகளை ஏற்றி கவலையுடன் வரவேற்ற சென்னை மீனவர்கள் title=

புத்தாண்டு உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாட்டத்துடன் தொடங்கியிருக்கும் நிலையில், சென்னை எண்ணூர் மக்கள் மிகுந்த கவலையுடனும், போராட்டத்துடனும் புத்தாண்டை வரவேற்றுள்ளனர். அவர்கள் அண்மையில் வாயு கிசவு ஏற்பட்ட கோரமண்டல் உரத் தொழிற்சாலையை கட்டாயம் மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியுள்ளனர்.  சென்னை எண்ணூர் உரத் தொழிற்சாலையில் இருந்து வெளியே அமோனியா வாயு கசிவால் பெரியகுப்பம் சின்ன குப்பம் பகுதியில் உள்ள மீனவ கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 

மேலும் படிக்க | எண்ணூர் போராட்டம்... இன்னொரு ஸ்டெர்லைட் போராட்டமாக மாறிவிடக்கூடாது - சவுக்கு சங்கர்!

திடீரென கடலில் இருந்து ஆலைக்கு செல்லும் குழாயில் இருந்து வாயு வெளியேறியது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் கடும் பீதியடைந்ததுடன் உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேறினர். அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்டோர் இந்த சம்பவத்தை கேள்விபட்ட அப்பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்து தங்க வைத்தனர். பலர் வேறு இடங்களுக்கு சென்று தஞ்சமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் வாயு கசிவு ஏற்பட்ட பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தி அப்பகுதியில் அம்மோனியா வாயு அளவுக்கு அதிகமாக இருப்பதை உறுதி செய்தனர். மேலும் தற்காலிகமாக ஆலையை மூடவும் உத்தரவிட்டனர்.

இதற்கு முன்பு பலமுறை இப்படி வாயு கசிவு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் உடனடியாக இந்த உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். வாயு கசிவு ஏற்பட்டது முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக 6வது நாளாக இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் பேசும்போது, இந்த தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும்.  தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய வாய்வு கசிவுகளால் மீனவர்களால் கடுமையாக பாதித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு மருத்துவ சேவைகள் எதுவும் செய்யப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். 

கொரமண்டல் உரத் தொழிற்சாலை இருக்கும் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ச்சியாக 6வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. 15 மீனவ கிராமங்கள் மீனவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த போராட்டம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தைப் போலவே தொடர்ச்சியாக நடத்தப்படும் என்றும் அவர்கள் உறுதியாக கூறியுள்ளனர். 

மேலும் படிக்க | புத்தாண்டு கொண்டாடுபவர்களுக்கு காவல்துறையின் முக்கிய அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News