சாதிவாரி கணக்கெடுப்பு : முதலமைச்சர் ஸ்டாலின் - பாமக ஜிகே மணி இடையே காரசார விவாதம்..!

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 24, 2024, 03:01 PM IST
  • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தல்
  • முதலமைச்சர் கொடுத்த பதிலால் ஜிகே மணி அதிருப்தி
  • சட்டப்பேரவையில் சபாநாயகர் இடையூறு செய்வதாக புகார்
சாதிவாரி கணக்கெடுப்பு : முதலமைச்சர் ஸ்டாலின் - பாமக ஜிகே மணி இடையே காரசார விவாதம்..! title=

தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி, தமிழ்நாடு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என கேட்டார். இதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்றத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் ஒன்றை கொண்டு வர இருப்பதாக தெரிவித்தார். இதற்கு பாமக ஆதரவளிக்க வேண்டும் என ஜிகே மணியிடம் கேட்டுக் கொண்ட அவர், இப்போது பாஜக கூட்டணியில் இருக்கும் நீங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் மத்திய அரசிடம் இருப்பதாகவும், அவர்களிடம் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி, நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இந்த கோரிக்கையை நிறைவேற்ற குரல் கொடுக்குமாறும் வலியுறுத்தினார். 

மேலும் படிக்க | பாமக தலைவர்கள் மீது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மானநஷ்ட வழக்கு!

இதற்கு பிறகு சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த ஜிகே மணி, சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து உரிய விளக்கம் கொடுக்காததால் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக செய்தியாளர்களிடம் பேசினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த பதில் திருப்தி அளிக்கவில்லை என்று தெரிவித்த அவர், வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு கொடுக்க மாநில அரசுக்கே முழு அதிகாரம் இருப்பதாகவும் கூறினார். மேலும், சட்டப்பேரவையில் இதுகுறித்து பேச சபாநாயகர் அப்பாவு அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்டினார் ஜிகே மணி. சமூகநீதி மாநிலம் எனக் கூறிக்கொள்ளும் தமிழ்நாட்டில், அனைத்து சாதியினருக்கும் உரிய இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என தெரிவித்த அவர், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு மாநில அரசால் கொடுக்க முடியும் என தெரிவித்தார்.

வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு கொடுப்பதற்கும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது என்பதும் வெவ்வேறு பிரச்சனைகள் என்ற ஜி.கே. மணி, மக்களை திசைதிருப்புவதற்காக இந்த இரண்டையும் ஒன்றாக கூறி மக்களை ஆட்சியாளர்கள் குழப்புவதாக குற்றம்சாட்டினார். சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் வன்னியர்களுக்கு 10.5 இட ஒதுக்கீடு கொடுப்பது என்பது வெவ்வேறு விவகாரங்கள் என அமைச்சர்களுக்கு நன்கு தெரிந்தாலும், இதனை வைத்து சட்டப்பேரவையில் அரசியல் செய்து கொண்டிருப்பதாகவும் விமர்சித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து எல்லா விவரங்கள் தெரிந்திருந்தாலும் அதனை கொடுக்க அவர்களுக்கு மனமில்லை என்பதை அவர்களின் நடவடிக்கைகள் காட்டுவதாகவும் ஜிகே மணி கூறினார். 

மேலும் படிக்க | கள்ளச் சாராய மரணங்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் காரணம்: எடப்பாடி பழனிச்சாமி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News