சேலத்தில் 720 பவுன் நகை கொள்ளை

Last Updated : May 2, 2017, 10:38 AM IST
சேலத்தில் 720 பவுன் நகை கொள்ளை title=

சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் இரும்புக் கடை நடத்தி வருகிறார் தொழிலதிபர் விஜயலட்சுமி. கிச்சிப்பாளையம் பகுதியில் வசித்து வரும் இவர் தன்னுடைய குடும்பத்தாருடன் திருப்பதி சென்று விட்டு இன்று அதிகாலை திரும்பியுள்ளார். வீட்டின் மேல்புறத்தில் உள்ள தன்னுடைய அறைக்கு சென்ற விஜயலட்சுமி ஜன்னல் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது பீரோ பீரோவில் சாவி போட்டு உள்ளே வைக்கப்பட்டிருந்த 720 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

பணம், நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள், எலுமிச்சை, மஞ்சள் குங்குமம் கொண்டு பில்லி சூனியம் வைத்ததோடு, கொள்ளை பற்றி போலீசிடம் புகார் அளித்தால் உயிர்பலி நேரிடும் என்று எச்சரிக்கும் கடிதத்தையும் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

கொள்ளை மற்றும் மிரட்டல் குறித்து விஜயலட்சுமி சேலம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். வீட்டில் பணிபுரியும் பணியாட்கள் அல்லது நெருங்கிய உறவினர்கள், நண்பர்களின் சதியில் அரங்கேறிய கொள்ளையா இது என்று போலீசார் முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Trending News