தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு.... ஒரே நாளில் 99 பேர் பலி...

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 5,879 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது... மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 2,51,738 ஆக அதிகரிப்பு...!

Last Updated : Aug 1, 2020, 07:21 PM IST
தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு.... ஒரே நாளில் 99 பேர் பலி...  title=

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 5,879 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது... மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 2,51,738 ஆக அதிகரிப்பு...!

தமிழகத்தில் இன்று மேலும் 5,879 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,51,738 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,034 ஆக உயர்ந்துள்ளது. 

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... தமிழகத்தில் இன்று புதிதாக 5,879 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில்,  5,822 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். சுமார், 57 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என கண்டறியபட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2,51,738 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று பாதிக்கப்பட்ட 5,879 பேரில் சென்னையில் மட்டும் 1,074 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகி உள்ளதால், சென்னையில் மட்டும் சுமார் 1,00,877 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் 121 ஆய்வகங்கள் (அரசு - 59 மற்றும் தனியார் - 62) உள்ளன. அதில், இன்று மட்டும் 60,580 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 27,18,718 மாதிரிகள் சோதனை செய்யபட்டுள்ளது. இன்று கொரோனா வைரஸ் உறுதியானவர்களில், 3,544 பேர் ஆண்கள், 2,335 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,52,651 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 99,060 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 27 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் இன்று மட்டும் 7,010 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்நிலையில், வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,90,966 ஆக உயர்ந்து உள்ளது.

Image

Image

தமிழகத்தில், இன்று மட்டும் கொரோனா பாதித்த 99 பேர் உயிரிழந்தனர். அதில், 22 பேர் தனியார் மருத்துவமனையிலும், 77 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 4,034 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 56,738 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 12,263 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 2,02,926 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 30,670 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ALSO READ | கொரோனாவை கொல்ல வெறும் தண்ணீர் போதுமா?.. ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ் விவரங்கள்....

Image

Trending News