பிரியாணியால் வந்த சோகம் - 41 பேர் மருத்துவமனையில் அனுமதி

புதுக்கோட்டையில் பிரியாணி சாப்பிட்ட 41 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : May 6, 2022, 12:11 PM IST
  • அறந்தாங்கியில் பிரியாணியால் பரிதாபம்
  • சாப்பிட்ட 41 பேருக்கு வாந்தி மயக்கம்
  • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
பிரியாணியால் வந்த சோகம் - 41 பேர் மருத்துவமனையில் அனுமதி  title=

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செந்தமிழ் நகரில் சித்திரைவேல் என்பவர் புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். கட்டடப் பணி நடைபெற்று வரும் நிலையில், நேற்று பணியாளர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்துள்ளார். பொட்டலங்களாக வந்த 40 மேற்பட்ட பார்சல்களை பணியாளர்களும், உறவினர்களும் சாப்பிட்டுள்ளனர். அந்த பிரியாணியை சாப்பிட்ட அனைவருக்குமே இரவில் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. சிலர் கடுமையான வயிற்று வலியாலும் அவதிப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க | தஞ்சையில் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

பிரியாணி சாப்பிட்ட 27 பேர் உடனடியாக சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும்போதே மேலும் 13 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்தனர். இதில் கனிமொழி என்ற பெண்ணுக்கு வயிற்று வலி அதிகமானதால், அவர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பிரியாணி கடைக்கு சென்று உணவை ஆய்வு செய்து கடைக்கு சீல் வைத்தனர்.

மேலும் படிக்க | தஞ்சை : பெண்ணிடம் தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து பணம் பறித்த இளைஞர்கள்

மேலும், விற்பனை செய்யப்பட்ட பிரியாணி கெட்டுப்போன பிரியாணியா? என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். அண்மையில், ஷவர்மா சாப்பிட்டு கேரளாவில் மாணவி ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல், தமிழகத்திலும் சில இடங்களில் கடைகளில் விற்பனை செய்யப்பட்ட கெட்டுப்போன உணவுகளை சாப்பிட்டு, உடல் உபாதைகளுக்கு உள்ளாகியுள்ளனர். நாளுக்கு நாள் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கெட்டுப்போன உணவுகளை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News