இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி, பந்துவீச்சுக்கு ஜாகிர்கான்

Last Updated : Jul 12, 2017, 08:28 AM IST
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி, பந்துவீச்சுக்கு ஜாகிர்கான் title=

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டன் கோலியுடனான ஆலோசனைக்கு பிறகு ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்பிளே கடந்த மாதம் 20-ம் தேதி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பொறுப்பிலிருந்து விலகினார்.

இதற்கிடையே, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. 

இதில் 6 பேர் நேர்காணலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். சச்சின் டெண்டுல்கர், கங்குலி, மற்றும் வி.வி.எஸ்.லக்ஷ்மன் ஆகியோர் அடங்கிய  குழு, அந்த ஆறு பேரிடம் நேற்று நேர் காணல் நடத்தியது. 

இந்நிலையில் பிசிசிஐ அதிகாரிகள் கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளராகவும், ஜாகிர்கான் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

2019-ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை வரை இருவரும் அப்பதவியில் நீடிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும், வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களில் ராகுல் டிராவிட் பேட்டிங் பயிற்சியாளராக பொறுப்பு வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News