T20 World Cup: பும்ரா விலகல்-னு யாரு சொன்னா? டிராவிட் கொடுத்த மெகா அப்டேட்

Jasprit Bumrah: காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா 20 ஓவர் உலககோப்பையில் பங்கேற்பது கடினம் என கூறப்பட்டு வந்த நிலையில் புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 2, 2022, 06:44 AM IST
  • ஜஸ்பிரித் பும்ரா காயம் அப்டேட்
  • ராகுல் டிராடவிட் கூறிய தகவல்
  • 20 ஓவர் உலக கோப்பையில் விளையாடுவாரா?
T20 World Cup: பும்ரா விலகல்-னு யாரு சொன்னா? டிராவிட் கொடுத்த மெகா அப்டேட் title=

ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலக கோப்பை தொடங்க இருக்கும் நிலையில், இந்திய அணிக்கு பின்னடைவாக பும்ரா காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். அவரை உலக கோப்பையில் விளையாட வைக்க வேண்டும் என விரும்பும் பிசிசிஐ, தொடர்ச்சியாக பும்ராவின் உடல்நிலையை கண்காணித்து வருகிறது. அவர் 20 ஓவர் உலக கோப்பையில் விளையாடுவாரா? இல்லையா? என்பது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி ஏற்கனவே கூறியிருந்த நிலையில், ராகுல் டிராவிட் புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.   

ராகுல் டிராவிட் அப்டேட்

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது 20 ஓவர் போட்டி நடக்க இருக்கும் நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார் ராகுல் டிராவிட். அவரிடம் பும்ராவின் காயம் குறித்த அப்டேட் கேட்டபோது, இது தொடர்பாக முடிவெடுக்க இன்னும் காலம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் காயம் குறித்து மருத்துவ நிபுணர்கள் அதிகாரப்பூர்வமாக கூறும் வரை, நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம் எனவும் கூறியுள்ளார். 

மேலும் படிக்க | உலகக்கோப்பை கனவு 'அம்போ' - இந்திய அணியில் இருந்து விலகும் முக்கிய வீரர்!

பும்ரா மீது நம்பிக்கை

"பும்ராவின் காயம் குறித்த மருத்துவ அறிக்கையை இன்னும் நான் ஆழமாக பார்க்கவில்லை. இப்போது வரை அவர் தென்னாப்பிரிக்கா தொடரில் இருந்து மட்டுமே வெளியேறி இருக்கிறார். ஆனால், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என என்பதை மருத்துவ நிபுணர்களின் இறுதி அறிக்கைக்குப் பிறகே கூற முடியும். அதுவரை பும்ரா அணிக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை எங்களிடம் இருக்கும். அவருக்கு நல்ல விஷயங்களே நடக்கும்" என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். 

பும்ராவுக்கு என்ன பிரச்சனை?

ஜஸ்பிரித் பும்ராவுக்கு முதுகில் ஏற்பட்டிருக்கும் ஸ்டெரெஸ் பிராக்சர், காரணமாக தென்னாப்பிரிக்கா தொடரில் இருந்து விலகியுள்ளார். காயத்தில் இருந்து மீண்டு வந்த அவர், தென்னாப்பிரிக்கா தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. 20 ஓவர் உலககோப்பையை கருத்தில் கொண்டு பும்ரா தொடர் சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் கூறினர். அதன்படி அவர் தற்போது மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சையில் இருக்கும் அவர், 20 ஓவர் உலககோப்பையில் பங்கேற்பாரா? என்ற கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது. பிசிசிஐ தலைவர் கங்குலி இது தொடர்பாக பேசும்போதுகூட, பும்ரா விவகாரத்தில் முடிவு எடுக்க இன்னும் போதுமான காலம் இருப்பதாக தெரிவித்தார். அதனால், பும்ராவின் மருத்துவ இறுதி அறிக்கையை பொறுத்தே அவர் 20 ஓவர் உலக கோப்பையில் விளையாடுவாரா? இல்லையா? என்ற முடிவு எட்டப்பட இருக்கிறது.

மேலும் படிக்க | வயசானாலும்... அது மட்டும் மாறல - சின்ன தல ரெய்னாவின் மிரட்டல் கேட்ச்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News