ஐஎஸ்எல் கால்பந்து: கேரளா 2_வது வெற்றி!!

Last Updated : Oct 25, 2016, 03:05 PM IST
ஐஎஸ்எல் கால்பந்து: கேரளா 2_வது வெற்றி!! title=

ஐ.எஸ்.எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து மூன்றாவது சீசன் போட்டி அக்டோபர் 1-ம் தேதி முதல் டிசம்பர் 18-ம் தேதி வரை நடக்கிறது. இதில் மொத்தம் 8 அணிகள் மோதுகின்றன. 

சென்னையின் எப்.சி., அட்லெடிகோ டீ கொல்கத்தா, நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி), கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி., எப்.சி.புனே சிட்டி, மும்பை சிட்டி எப்.சி., எப்.சி.கோவா, டெல்லி டைனமோஸ் எப்.சி. ஆகிய 8 அணிகள் ஆகும். 

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

கோவாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சி மற்றும் எப்சி கோவா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் கோவா 1-0 என முன்னிலை வகித்தது. ஆனால் முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் கேரளா வெற்றி பெற்றது. கேரளா அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது.

இன்று மும்பை சிட்டி எப்சி - அட்லெட்டிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

 

 

Trending News