ஐஎஸ்எல் கால்பந்து: கேரளா - டெல்லி அணிகள் மோதல்

Last Updated : Dec 14, 2016, 04:39 PM IST
ஐஎஸ்எல் கால்பந்து: கேரளா - டெல்லி அணிகள் மோதல் title=

ஐ.எஸ்.எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து மூன்றாவது சீசன் போட்டி அக்டோபர் 1-ம் தேதி முதல் டிசம்பர் 18-ம் தேதி வரை நடந்து வருகிறது. இதில் 

சென்னையின் எப்.சி., அட்லெடிகோ டீ கொல்கத்தா, நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி), கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி., எப்.சி.புனே சிட்டி, மும்பை சிட்டி எப்.சி., எப்.சி.கோவா, டெல்லி டைனமோஸ் எப்.சி. ஆகிய மொத்தம் 8 அணிகள் மோதின.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதின. லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் அட்லெடிகோ டீ கொல்கத்தா, மும்பை சிட்டி எப்.சி, கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி, டெல்லி டைனமோஸ் எப்.சி என முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.

கொல்கத்தா - மும்பை மோதிய அரை இறுதி முதல் சுற்றில் கொல்கத்தா 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது. நேற்று மும்பையில் நடந்த அரை இறுதி 2-வது சுற்று ஆட்டத்தில் இவ்விரு அணிகள் மோதின. ஆனால் இந்த ஆட்டம் கோல் இன்றி டிரா ஆனது. எனவே புள்ளிகள் அடிப்படையில் கொல்கத்தா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இதேபோல கேரளா - டெல்லி அணிகள் மோதிய அரை இறுதி முதல் சுற்றில் கேரளா 1-0 என்ற கணக்கில் வென்றது. இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் அரை இறுதி 2-வது சுற்று போட்டி டெல்லியில் நடக்கிறது. இவ்விரு அணிகள் மோதுகின்றன.

இன்றைய போட்டியில் கேரளா டிரா செய்தாலே போதும். இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும். டெல்லி அணி கண்டிப்பாக 2 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் அப்போதுதான் இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியும் என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

Trending News