INDvsENG: தொடரும் இந்தியாவின் ஆதிக்கம் ஆறாவது விக்கெட்டை இழந்த இங்கிலாந்து

இன்று நான்காவது டெஸ்ட் போட்டியின் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 30, 2018, 08:53 PM IST
INDvsENG: தொடரும் இந்தியாவின் ஆதிக்கம் ஆறாவது விக்கெட்டை இழந்த இங்கிலாந்து title=

இங்கிலாந்து அணி தனது ஆறாவது விக்கெட்டை இழந்தது.

 

 


இங்கிலாந்து அணி தனது ஐந்தாவது விக்கெட்டை இழந்தது. ஜோஸ் பட்லர் 21(24) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த விக்கெட்டை முகம்மது ஷமி வீழ்த்தினார். இந்திய அணியின் சார்பில் இர்ஹுவரை பும்ரா இரண்டு விக்கெட்டும், இஷாந்த் ஹர்திக் மற்றும் ஷமி தலா ஒரு விக்கெட்டும் எடுத்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி இங்கிலாந்து அணி 30 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்துள்ளது.

 

 


நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 24 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்துள்ளது. ஜோஸ் பட்லர்* 13(15) மற்றும் பென் ஸ்டோக்ஸ்* 12(41) களத்தில் உள்ளனர்.

இந்திய அணியின் சார்பில் பும்ரா இரண்டு விக்கெட்டும், இஷாந்த் மற்றும் ஹர்திக் தலா ஒரு விக்கெட்டும் எடுத்துள்ளனர்.

 

 


இங்கிலாந்து அணி 36 ரன்களுக்கு நான்கு விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது. இந்திய அணியின் சார்பில் பும்ரா இரண்டு விக்கெட்டும், இஷாந்த் மற்றும் ஹர்திக் தலா ஒரு விக்கெட்டும் எடுத்துள்ளனர்.

பும்ரா - இரண்டு விக்கெட்
இஷாந்த் -ஒரு விக்கெட்
ஹர்திக் -ஒரு விக்கெட்

 

 


இங்கிலாந்து அணி மூன்று விக்கெட்டை இழந்து உள்ளது. அணியின் ஸ்கோர் ஒரு ரன் இருக்கும் போது ஒரு விக்கெட்டும், 15 ரன்கள் இருக்கும் போது 

இரண்டாவது விக்கெட்டும் வீழ்ந்தது. 28 ரன்கள் இருக்கும் போது மூன்றாவது விக்கெட் வீழ்ந்தது. முதல் விக்கெட்டை பும்ராவும், இரண்டாவது விக்கெட்டை இஷாந்த் ஷர்மாவும்,  மூன்றாவது விக்கெட்டை பும்ரா கைப்பற்றினர்.

தற்போதைய நிலவரப்படி, இங்கிலாந்து அணி 14 ஓவருக்கு மூன்று விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் எடுத்துள்ளது. 

 

 


இங்கிலாந்து அணி இரண்டு விக்கெட்டை இழந்து உள்ளது. அணியின் ஸ்கோர் ஒரு ரன் இருக்கும் போது ஒரு விக்கெட்டும், 15 ரன்கள் இருக்கும் போது இரண்டாவது விக்கெட்டும் வீழ்ந்தது. முதல் விக்கெட்டை பும்ராவும், இரண்டாவது விக்கெட்டை இஷாந்த் ஷர்மாவும் கைப்பற்றினர்.

தற்போதைய நிலவரப்படி, இங்கிலாந்து அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்துள்ளது. 

 

 

 


இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

இந்த சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆகஸ்ட் 18 ஆம் தேதி மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் கட்டாயமாக வெற்றி பெற்றே ஆக வேண்டும், இல்லையென்றால் தொடரை இழக்க நேரிடும் என்ற சூழ்நிலையில் ஆடிய இந்திய அணி, 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இன்றைய டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் அமைந்துள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

 

தற்போது டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து இரண்டு முறையும், இந்தியா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. இன்று நான்காவது ஆட்டம் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பெற்றி பெற்று தொடரை 2-2 என சமநிலை பெருமா? அல்லது டிரா செய்து இங்கிலாந்துக்கு முற்றிபுள்ளி வைக்குமா? அல்லது இங்கிலாந்து தொடரை வெல்லுமா? என பல கேள்விகளுக்கு விடை அடுத்தடுத்த நாட்களில் கிடைக்க உள்ளது.

 

Trending News