ஜெயலலிதா மறைவு: இரு அணி வீரர்கள் கருப்பு பேண்ட் அணிந்து விளையாடி வருகின்றனர்

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று சென்னையில் தொடங்கியது. 

Last Updated : Dec 16, 2016, 12:07 PM IST
ஜெயலலிதா மறைவு: இரு அணி வீரர்கள் கருப்பு பேண்ட் அணிந்து விளையாடி வருகின்றனர் title=

சென்னை: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று சென்னையில் தொடங்கியது. 

ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்ட் ‘டிரா’ ஆன நிலையில் அடுத்த 3 டெஸ்டுகளில் முறையே 246 ரன், 8 விக்கெட், இன்னிங்ஸ் மற்றும் 36 ரன்கள் ஆகிய வித்தியாசங்களில் இந்திய அணி இமாலய வெற்றியை பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியுள்ளது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.

போட்டி தொடர்வதுக்கு முன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இரண்டு அணிகளும் இரங்கல் தெரிவித்தனர். இந்திய--இங்கிலாந்து அணி வீரர்கள் கருப்பு பேண்ட் அணிந்து விளையாடி வருகின்றனர்.

 

 

Trending News