INDvsPAK: மைதானத்திற்கு வந்த ஊர்வசி ரவுடேலா! வைரலாகும் ரிஷப் பந்தின் சிரிப்பு!

Ind vs Pak: இந்தியா - பாகிஸ்தான் போட்டியை நேரில் காண நடிகை ஊர்வசி ரவுடேலா துபாய் மைதானத்திற்கு வந்தது தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Aug 29, 2022, 06:30 AM IST
  • பந்த்திற்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு.
  • இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.
  • பாண்டியா அதிரடியில் பாகிஸ்தான் தோல்வி.
INDvsPAK: மைதானத்திற்கு வந்த ஊர்வசி ரவுடேலா! வைரலாகும் ரிஷப் பந்தின் சிரிப்பு! title=

2022 ஆசியக் கோப்பையில் இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி விறுவிறுப்பாக நடந்த போதிலும், ரிஷப் பந்த் மற்றும் ஊர்வசி ரவுடேலா இருவரும் இணையத்தில் ட்ரெண்ட் செய்யப்பட்டனர்.  பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை 2022 தொடக்க ஆட்டத்தில் இந்திய அணியில் ரிஷப் பந்த்திற்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது.  இந்த போட்டியை காண இந்திய நடிகை மற்றும் மாடல் ஊர்வசி ரவுடேலா துபாயில் மைதானத்திற்கு வந்திருந்தார்.  இந்த சமயத்தில் பந்தின் சிரிப்பு வைரலானது. சமீப காலமாக நேரடியாக இல்லாவிட்டாலும், பந்த் - ஊர்வசி இடையேயான போர் சமூக வலைத்தளம் மூலமாக வெடித்தது.  

 

ஊர்வசி ரவுடேலா சமீபத்திய நேர்காணலில், டெல்லியில் தனது படப்பிடிப்பு தளங்களில் தன்னை காண 'ஆர்பி'  இரவு முழுவதும் காத்திருந்ததாகக் கூறிய பிறகு இருவருக்கும் சண்டை தொடங்கியது. “திரு ஆர்பி ஹோட்டல் லாபிக்கு வந்து சந்திக்க விரும்பினார். பத்து மணி நேரம் கடந்துவிட்டது, நான் தூங்கிவிட்டேன். என்னால் எந்த அழைப்புகளையும் எடுக்க முடியவில்லை, நான் எழுந்தபோது 16-17 தவறவிட்ட அழைப்புகளைப் பார்த்தேன், யாரோ எனக்காகக் காத்திருப்பதால் நான் மிகவும் மோசமாக உணர்ந்தேன், என்னால் அவர்களைச் சந்திக்க முடியவில்லை. நீங்கள் மும்பை வந்ததும் சந்திப்போம் என்று சொன்னேன். நாங்கள் மும்பையில் சந்தித்தோம்” என்று ஊர்வசி கூறினார்.

 

மேலும் படிக்க | Asia Cup 2022 போட்டிக்கு முன்பாக ரோகித் சர்மாவுக்கு டென்ஷனை ஏற்படுத்திய விஷயம்

இதையடுத்து நடிகையின் பெயரை குறிப்பிடாமல் ரிஷப் பந்த் தனது இன்ஸ்டாகிராமில் “சில அற்ப புகழ் மற்றும் தலைப்புச் செய்திகளுக்காக நேர்காணல்களில் பொய் சொல்கிறார்கள் என்பது வேடிக்கையானது. சிலர் புகழுக்காகவும் பெயருக்காகவும் ஏங்குவது வருத்தமாக இருக்கிறது. கடவுள் அவர்களை ஆசீர்வதிக்கட்டும்”என்று பந்த் பதிவிட்டு இருந்தார்.  ரிஷப் பந்த் மற்றும் ஊர்வசி ரவுடேலா இதற்கு முன் டேட்டிங் செய்ததாக கூறப்படுகிறது.  தற்போது இருவருக்கும் இணைய போர் நடந்து வரும் நிலையில் ஊர்வசி மைதானத்திற்கு வந்தது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

மேலும் படிக்க | IND vs PAK: ’அந்த தவறு இந்த முறை நடக்காது’ இந்தியாவின் ’கேம்’ பிளான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News