சாம்பியன்ஸ் டிராபி: டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச்சு

Last Updated : Jun 3, 2017, 03:02 PM IST
சாம்பியன்ஸ் டிராபி: டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச்சு title=

ஐசிசி நடத்தும் 50 ஓவர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் லண்டனில் தொடங்கியது. இந்த தொடரை இங்கிலாந்து நடத்துகிறது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒரு பிரிவுக்கு நான்கு அணிகள் என 2 பிரிவாக(‘ஏ’ , ‘பி’)  பிரிக்கப்பட்டுள்ளது. 

‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 3-வது லீக்கில் இலங்கையும், தென்ஆப்பிரிக்காவும் (பி பிரிவு) மோதுகின்றன.

தற்போது இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச உள்ளது. 

‘நம்பர் ஒன்’ அணியான தென்ஆப்பிரிக்கா டிவில்லியர்ஸ் தலைமையில் களம் இறங்குகிறது. ரன்வேட்டைக்கு டிவில்லியர்ஸ், மில்லர், குயின்டான் டி காக், அம்லா, பிளிஸ்சிஸ், விக்கெட் வேட்டைக்கு ‘நம்பர் ஒன்’ பவுலர் காஜிசோ ரபடா, கிறிஸ்மோரிஸ், இம்ரான் தாஹிர் என்று தென்ஆப்பிரிக்கா எல்லா வகையிலும் மிக வலுவாக விளங்குகிறது. 

தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், அம்லா, பாப் டு பிளிஸ்சிஙஸ், டுமினி, டேவிட் மில்லர், பெலக்வாயோ, கிறிஸ் மோரிஸ், ரபடா, மோர்னே மோர்கல் அல்லது வெய்ன் பார்னல், இம்ரான் தாஹிர்.

இலங்கை: நிரோஷன் டிக்வெல்லா, உபுல் தரங்கா (கேப்டன்), குசல் மென்டிஸ், தினேஷ் சன்டிமால், குணரத்னே, குசல் பெரேரா, கபுகேதரா, திசரா பெரேரா, குலசேகரா, மலிங்கா, பிரசன்னா அல்லது சன்டகன்.

Trending News