பும்ரா போல பந்துவீசி கலாய்த்த ஹர்திக் பாண்டியா! வைரலாகும் வீடியோ!

ஹர்திக் பாண்டியா ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சைப் போல பயிற்சியில் பந்து வீசி அந்த வீடியோவை பதிவேற்றி உள்ளார்.    

Written by - RK Spark | Last Updated : Aug 24, 2022, 12:13 PM IST
  • பும்ரா போல பவுலிங் செய்த பாண்டியா.
  • இன்ஸ்டாவில் பதிவேற்றி கிண்டல்.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
பும்ரா போல பந்துவீசி கலாய்த்த ஹர்திக் பாண்டியா! வைரலாகும் வீடியோ! title=

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆகஸ்ட் 27-ம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பைக்கு இந்திய அணி தயாராகி வருகிறது.  நேற்று இந்திய அணியின் வீரர்கள் ஐக்கிய அமீரகத்திற்கு கிளம்பினர்.  காயத்தில் இருந்து மீண்டு சிறப்பாக விளையாடி வரும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆசிய கோப்பைக்கு முழு வீச்சில் தயாராகி வருகிறார். ஜிம்பாப்வேயில் சமீபத்தில் முடிவடைந்த இந்தியாவின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் போது பாண்டியா மற்றும் மற்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.  இந்நிலையில், ஹர்திக் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அதில் ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சு மற்றும் கொண்டாட்ட பாணியைப் போல தானும் செய்துள்ளார்.  இன்ஸ்டாகிராமில் வீடியோவைப் பகிரும் போது, ​​ஹர்திக் "எப்படி இருக்கிறது, பூம்?" என்று பும்ராவை டேக் செய்திருந்தார்.  

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hardik

ஹர்திக்கின் பதிவுக்கு பதிலளித்த பும்ரா, அவரது செயல் மற்றும் கொண்டாட்டம் இரண்டிற்கும் அவரைப் பாராட்டினார்.  க்ருனால் பாண்டியா மற்றும் கீரன் பொல்லார்ட் இருவரும் "ஸ்லாடன்" என்று எழுதி வீடியோவிற்கு பதிலளித்தனர்.  ஹர்திக், க்ருனால் மற்றும் பொல்லார்ட் ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ராவுடன் இணைந்து கடந்த சீசன் வரை இருந்தனர், ஹர்திக்கை குஜராத் டைட்டன்ஸ் மற்றும் க்ருனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஏலத்தில் வாங்கினார்.

har

மேலும் படிக்க | அப்ரிடிக்கு பதிலாக பாகிஸ்தான் அணியில் இணைந்த வீரர்! இந்தியாவிற்கு மேலும் சிக்கல்!

வரவிருக்கும் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இடம் பெற்றுள்ள நிலையில், ஜஸ்பிரித் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளார்.  தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு பெற்று வருகிறார்.  அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதை வீடியோ மூலம் பதிவிட்டு இருந்தார்.  ஆசிய கோப்பையில் பும்ரா இல்லாத நிலையில், சிறப்பு பந்துவீச்சாளர்களான புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் மற்றும் அவேஷ் கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.  பும்ராவைத் தவிர, காயம் காரணமாக ஹர்ஷல் படேலும் இடம் பெறவில்லை.  ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியுடன் ஆட்டத்தை தொடங்குகிறது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by jasprit bumrah (@jaspritb1)

மேலும் படிக்க | கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் போர் எப்போது ஆரம்பித்தது தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News