இந்த ராசிகளுக்கு அடித்தது யோகம்: புதனும் சுக்கிரனும் சேர்ந்து நன்மை செய்வார்கள்

Astrology: இரு முக்கிய கிரகங்களான புதனும் சுக்கிரனும் ஒரே இடத்தில் இணைந்துள்ளதால், 3 ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நன்மைகள் கிடைக்கவுள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 22, 2022, 06:08 PM IST
  • புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகளை வழங்கும்.
  • புதன், சுக்கிரன் இணைவதால் இந்த ராசியில் மகாராஜ யோகம் உருவாகி வருகிறது.
  • இதன் காரணமாக மிதுன ராசிக்காரர்களுக்கு பல வகைகளில் பண ஆதாயம் உண்டாகும்.
இந்த ராசிகளுக்கு அடித்தது யோகம்: புதனும் சுக்கிரனும் சேர்ந்து நன்மை செய்வார்கள் title=

புதன் சுக்கிரன் இணைப்பு, ராசிகளில் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரே ராசியில் இரண்டு கிரகங்கள் சேர்ந்தால் அது யுதி எனப்படும். ஜூலை 13 அன்று, சுக்கிரன் கிரகம் மிதுன ராசிக்குள் நுழைந்தது. இந்த ராசியில் புதன் கிரகம் ஏற்கனவே அமர்ந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் மிதுன ராசியில் புதனும் சுக்கிரனும் இணைந்திருப்பதால் அனைத்து ராசிக்காரர்களில் வாழ்விலும் அதன் தாக்கம் இருக்கும். குறிப்பிடத்தக்க வகையில் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அதிக அளவில் பிரகாசிக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மிதுனம்:

புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகளை வழங்கும். புதன், சுக்கிரன் இணைவதால் இந்த ராசியில் மகாராஜ யோகம் உருவாகி வருகிறது. இதன் காரணமாக மிதுன ராசிக்காரர்களுக்கு பல வகைகளில் பண ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வு பதவி உயர்வு ஏற்படலாம். நிதி ஆதாயங்களை பெறுவீர்கள். 

மேலும் படிக்க | ஜூலை இறுதியில் இந்த கிரகத்தின் ராசி மாற்றம்; இந்த ராசிகளுக்கு லாபம் 

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் பத்ரா என்ற ராஜயோகம் உருவாகி வருகிறது. இந்த யோகம் வியாபாரிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி வருவதற்கான அறிகுறிகள் தென்படும். இந்த ராசியில் புதாதித்ய யோகம் அமைவதால் அதிர்ஷ்டம் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் இப்போது நடந்து முடியும்.

குடும்ப உறிப்பினர்களிடையே புரிதல் அதிகரிக்கும். கணவன் /  மனைவி, குழந்தைகளுக்கு இடையே ஒற்றுமை ஓங்கும். பணி இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களின் ஜாதகத்தில் இரண்டு ராஜயோகங்கள் உருவாகி வருகின்றன. முதல் ருச்சக் யோகம் மற்றும் இரண்டாவது ஷாஷ் யோகமாகும். இந்த இரண்டு ராஜயோகங்கள் அமைவதால் திடீர் பண ஆதாயம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். இது முதலீடு செய்வதற்கு சாதகமான காலம்.

வணிகத்தில் ஈடுபட்டுள்ள மகர ராசிக்காரர்களுக்கு இது சாதகமான நேரமாக இருக்கும். இந்த நேரத்தில் செய்யப்படும் முதலீடு எதிர்காலத்தில் லபாத்தை ஈட்டித் தரும். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து அனுகூலமான செய்திகளை பெறுவீர்கள். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிபடுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனியின் அருளால் மஹாபுருஷ ராஜயோகம்: 4 ராசிகளின் வாழ்க்கை இரவோடு இரவாக மாறும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News