ஆகஸ்ட் 21ல் புதன் பெயர்ச்சி, மூன்று ராசிக்காரர்களுக்கு கஷ்ட காலம்

ஆகஸ்ட் 21 அன்று புதன் பெயர்ச்சி, வியாழன்-புதன் உத்தராயண யோகம் மூன்று ராசிக்காரர்களின் கவலையை அதிகரிக்கும்

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 20, 2022, 01:05 PM IST
  • ஆகஸ்ட் 21 அன்று புதன் பெயர்ச்சி
  • வியாழன்-புதன் உத்தராயண யோகம்
  • மூன்று ராசிக்காரர்களின் கவலையை அதிகரிக்கும்
ஆகஸ்ட் 21ல் புதன் பெயர்ச்சி, மூன்று ராசிக்காரர்களுக்கு கஷ்ட காலம் title=

ஜோதிடத்தின் படி, 12 ராசிகளில் உள்ள ஒன்பது கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு மேஷத்திலிருந்து மீனத்திற்கு மாறுகின்றன. எனவே, அந்த கிரகம் சில ராசிக்காரர்களுக்கு சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தி தருகிறது. சில சமயங்களில் ஒரே ராசியில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒன்று சேரும். அதனால்தான் சில யோகங்கள் உருவாகின்றன. அதன்படி நாளை 21 ஆகஸ்ட் 2022 அன்று மதியம் 1:55 மணிக்கு புதன் கிரகம் கன்னி ராசியில் நுழைகிறார். ஆனால் இந்த புதன் சஞ்சாரத்தின் போது, ​​புதன் வியாழனிலிருந்து ஏழாவது இடத்தில் இருப்பார். எனவே வியாழன் மற்றும் புதன் இடையே சம்சப்தக் யோகம் உருவாகும். எனவே இவை மூன்று ராசிக்காரகளுக்கு கஷ்ட காலத்தை ஏற்படுத்தி தரும். இந்த மூன்று ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.

புதன் கிரகம் ராசி மாற்றத்தால் இந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

கும்பம்: புதன் மாறுவதால் கும்ப ராசிக்காரர்களின் உடல்நலத்தில் கோளாறுகள் ஏற்படும். எனவே முடிந்த வரை வெளியில் இருந்து உணவு சாப்பிடுவதை தவிர்க்கவும். அதேபோல் உங்களின் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். அதே சமயம் இந்த யோகத்தால் உங்களுக்கு விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே வாகனம் ஓட்டும் போது மிகுந்த கவனமாக இருங்கள் மற்றும் வாகன வேகத்தை கட்டுக்குள் வைத்து ஓட்டவும். மற்றவர்களுடன் தேவையற்ற சண்டையிடுவதைத் தவிர்த்து, மென்மையாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

மேலும் படிக்க | சிம்மத்தின் இணையும் சூரியன் - சுக்கிரன்; இந்த ‘4’ ராசிகளின் பொற்காலம் ஆரம்பம்! 

துலாம்: துலாம் ராசிக்காரர்கள் இந்த புதன் பெயர்ச்சி காலத்தில் பணப் பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். அதேபோல் வருமானத்தை விட செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது, பல இடங்களில் தேவையற்ற செலவுகள் வரக்கூடும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதேபோல் நீங்கள் நீதிமன்ற வழக்குகளில் சிக்கிக் கொள்வீர்கள்.

மேஷம்: புதன் பெயர்ச்சிக்குப் பிறகு மேஷ ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்கள் உண்டாக்கி தரும். பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் அக்கறை காட்டுங்கள். குழந்தைகளின் மனம் படிப்பில் இருந்து அலையலாம், இது உங்கள் மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும். குழந்தைகள் கெட்ட சகவாசத்தில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. முடிந்த வரை, இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு அதிக நேரம் கொடுத்து அவர்களை படிக்கத் தூண்ட செய்யுங்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | ஆகஸ்டில் கிரகங்களின் ராசி மாற்றத்தால் இந்த ராசிகளுக்கு எக்கச்சக்க ஏற்றம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News