Video: இணையத்தை கலக்கும் உலக மகா புகைப்பட கலைஞர்!

மனிதர்களின் நீங்கா நினைவுகளில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் ஒன்று அவர்களது திருமணம்!

Written by - Mukesh M | Last Updated : Apr 20, 2018, 12:55 PM IST
Video: இணையத்தை கலக்கும் உலக மகா புகைப்பட கலைஞர்! title=

மனிதர்களின் நீங்கா நினைவுகளில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் ஒன்று அவர்களது திருமணம்!

இந்த திருமணத்தின் நினைவுகளை அழியாமல் பார்த்துக்கொள்ள தற்காலங்களில் புகைப்பட கலைஞர்கள் தான் உதவுகின்றனர். திருமணம் ஆகி சில தினங்களிலேயே தம்பதியர் இருவரும் பிரிந்துவிடும் நிகழ்வுகள் நடப்பதுண்டு, அந்த சமையத்தில் அவர்களது திருமண புகைப்படங்கள் பிரிந்துவிடும் தம்பதியரையும் இணைத்துவிடும் வல்லமை படைத்துள்ளது.

அத்தகைய புகைப்படத்திற்காக புகைப்பட கலைஞர்கள் எத்தனை அளவு தான் மெனக்கிடுகிறார்கள். அவ்வாறு நடைப்பெற்ற நிகழ்வு ஒன்று தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கேரளாவைச் சேர்ந்த திருமண ஜோடியினை புகைப்படம் எடுக்க முயன்ற புகைப்பட கலைஞர் ஒருவர், மரத்தின் கிளையில் குரங்காய் தாவி, தலைகீழாய் தொங்கி இந்த புகைப்படத்தினை எடுத்துள்ளார். இந்த நிகழ்வின் வீடியோவினை இணையத்தில் மக்கள் பகிர்ந்து வருகின்றனர்.

உங்களுக்காக அந்த வீடியோ...

Trending News