"சிரியா மண்ணே சிரி" கண்ணீர் வரவைக்கும் வைரமுத்து கவிதை!

கவிஞர் வைரமுத்து சிரியா மண்ணே சிறி என கண்களை கலங்க வைக்கும் வகையில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Last Updated : Mar 3, 2018, 01:52 PM IST
"சிரியா மண்ணே சிரி" கண்ணீர் வரவைக்கும் வைரமுத்து கவிதை! title=

தற்போது இணையத்தில் பலராலும் விவாதிக்கப்பட்டு வரும் விஷயம் சிரியா பிரச்சணை தான்!

சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ம் தேதி அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் தொடங்கிய சண்டை இன்றுவரை தொடர்ந்து வருகிறது. 

இந்நிலையில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே கிளர்ச்சியாளர்களின் கிழக்கு கூட்டா பகுதி மீது அதிபர் ஆதரவு படை நடத்திய தாக்குதலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் உள்ள மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

இந்த சம்பவத்தில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் எந்தப் பாவமும் அறியாத பட்சிலம் குழந்தைகள். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைக்கிறது.

பிரபலங்கள் பலரும் சிரியா பிரச்சணை குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ட்விட்டர் மூலமும், முகப்புத்தகம் மூலமும் தீவிரமாக போராடி வருகின்றனர். இதை தொடர்ந்து கவிஞர் வைரமுத்து சிரியா மண்ணே சிரி என்ற தலைப்பில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். 

அந்த கவிதையில் அவர் கூறியுள்ளது...!

குருதித் துளி சொட்டுகிறது, மழை அறியா சிரியா வானம்..
இப்போது இது என்தேசம் என்கிறது;  
மேகங்களை நாடுகடத்தி ஆகயங்கள் கை பற்றிய கரும்புகை..
கருக்குழியில் வளர்த்த சிசுக்களை; பதுங்கு குழியில் பாதுகாக்கிறார்கள் 
தங்கள் கற்பை போல தாய் மார்கள்...!
சாந்தியும் சமாதானமும் நிலவகூரும் பிராத்தனை குரல்...நசுங்கி போகிறது 
குழந்தைகள் கதறும் கூட்டோசையில்...
மீட்டெடுத்த சிறார் உடம்பில் பாதி மாமிசம்..பதுங்கு குழிகளில் மீதி மாமிசம்!
ரசாயன இறைச்சி உண்டதில் இறந்து கிடந்தனர் பறந்த கழுகுகள்!
வீடுகள் கான்கீரிட் கல்லறைகளாவதும்...
வீதிகள் உடல்களின் குப்பைத்தொட்டிகளாவதும்...
சாப்பாட்டு மேஜைகளில் பிணங்கள் பறிமாறப்படுவதும்...
அதிராத குரல்களில் உடையாடபடுகின்றனர் ஐ.நா-வின் தேநீர் இடைவெளிகளில்!
எலும்புக்கூடுகளில் எது சன்னி எது ஷியா?
தோண்டிய தொட்டக்களில் எது அமெரிக்க; எது ரஷியா?
எரியும் நெருப்பில் எது சவூதி; எது கொரியா?
ஆயுத சூதாடிகளின் வங்கிக் கணக்கு நிறைவது பணத்தினால் இல்லை பிணத்தினால்.
கபால கோப்பைகளில் ஒயின் பருக முடியாது.
போரும் மரணமும் எவ்வடிவிலும் அழகில்லை....!
வழியும் குருதியும் எவ்வுடம்பிலும் சுகமில்லை....!
அழுத குழந்தையே பால் குடிக்கும் என்றால் அமைதி பால் எங்கே?
எல்லா நாடுகளின் மார்பிலும் சமாதானம் நிலவட்டும்.
சிரியா மண்ணே சிறி!
வழியும் குருதியே வழி!
ஒலியா போறே ஒழி!
ரோஜாக்களில் இரத்தம் வடிவது வட்ட உருண்டைக்கு கேட்ட சகுனம்...!

என்ற கவிதையை தற்போது யூ-டியூபில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த கவிதை உங்கள் பார்வைக்கு..!

Trending News