கொரோனா டெஸ்ட் எடுக்க முடியாது, தாறுமாறாக ரகளை செய்த குடும்பம்!

சுகாதாரத்துறை ஊழியர்கள் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனைக்கு மாதிரிகளை சேகரித்து வருகின்றனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 20, 2021, 02:38 PM IST
கொரோனா டெஸ்ட் எடுக்க முடியாது, தாறுமாறாக ரகளை செய்த குடும்பம்! title=

இந்தியா முழுதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கின்றது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் தொற்றின் அளவு அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 9 ஆயிரத்து 533 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 6,572 ஆண்கள், 4,369 பெண்கள் என மொத்தம் 10 ஆயிரத்து 941 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

இந்த பட்டியலில் வெளிநாட்டில் இருந்து வந்த இருவரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 23 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 406 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1,499 முதியவர்களும் இடம்பெற்று உள்ளனர்.  

தமிழகத்தில் (Tamil Nadu) இதுவரை 2 கோடியே 9 லட்சத்து 56 ஆயிரத்து 848 பேருக்கு கொரோனா பரிசோதனை (Corona Test) மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 10 லட்சத்து 2 ஆயிரத்து 392 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 6 லட்சத்து 5 ஆயிரத்து 147 ஆண்களும், 3 லட்சத்து 97 ஆயிரத்து 209 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 36 பேரும் அடங்குவர். 

ALSO READ: Lockdown அச்சத்தில் தமிழகத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

அதில் 12 வயதுக்கு உட்பட்ட 36 ஆயிரத்து 324 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 39 ஆயிரத்து 731 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 22 பேரும், தனியார் மருத்துவமனையில் 22 பேரும் என 44 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்து உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 13 ஆயிரத்து 157 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 6,172 பேர் குணமாகியுள்ளனர்.  

கொரோனா பரவாமல் (COVID-19) தடுக்க, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, மாஸ்க் அணிவது, வெளியில் செல்வதை தவிர்ப்பது உட்பட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மக்கள் எடுக்க வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்கிடையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனைக்கு மாதிரிகளை சேகரித்து வருகின்றனர். அதன்படி கொரோனா பரிசோதனைக்கு மாதிரிகளை சேகரிக்க சென்ற சுகாதாரத்துறை ஊழியர்கள் கோவை காந்திபுரம் மூன்றாவது எக்ஸ்டன்ஷன் பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டிற்கு சென்றனர்.

 

 

அப்போது அந்த வீட்டில் இருந்து வெளியே வந்த உரிமையாளர், தங்கள் வீட்டில் யாருக்கும் கொரோனா இல்லை என்றும், சுகாதாரத்துறை ஊழியரின் செல்போனை வாங்கி வீசி தகராறில் ஈடுபட்டார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து சுகாதாரத்துறை ஊழியர்கள், சுகாதாரத்துறை மேல் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News