மதுவை மறக்க இரும்பை சாப்பிட்ட நபர்; X-Ray பார்த்து அதிர்ந்த டாக்டர்கள்..!!

சில நேரங்களில் சில வினோதமான வழக்குகள் மருத்துவர்களையும் கூட அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தி விடுகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 4, 2021, 01:49 PM IST
  • லிதுவேனியாவைச் சேர்ந்த ஒருவருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது.
  • நீண்ட காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்
  • மது பழக்கட்தி விட இரும்பு பொருட்களை சாப்பிட ஆரம்பித்தார்.
மதுவை மறக்க இரும்பை சாப்பிட்ட நபர்; X-Ray பார்த்து அதிர்ந்த டாக்டர்கள்..!!  title=

சில நேரங்களில் சில வினோதமான வழக்குகள் மருத்துவர்களையும் கூட அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தி விடுகிறது. ​​ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட நோயாளியை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

'டெய்லி மெயிலில்' வெளியான செய்தி அறிக்கையில் இது குறித்து கூறப்பட்டுள்ளது. தீராத வயிற்று வலியினால் அவதிப்பட்டு வந்த இருப்பதாக புகார் கூறி மருத்துவரை அணுகினார். தனக்கு உயிர் போகும் அளவிற்கு வலி அதிகமாக இருப்பதாக மருத்துவரிடம் கூறினார். இதற்குப் பிறகு, டாக்டர் அந்த நபருக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்தபோது, அதிர்ச்சியில் உறைந்தனர். அவரது வயிற்றில், இரும்பின் இரும்பு ஆணிகள் இருப்பதை பார்த்த மருத்துவர்கள் அதிர்ந்தனர். 

வயிற்றில் இரும்பு ஆணிகள், திருகுகள் போன்ற ஏராளமான இரும்புப் பொருட்களை மருத்துவர்கள் கண்டறிந்தது, இது குறித்து நோயாளியிடம் கேட்டனர். மது அருந்தும் பழக்கத்திலிருந்து விடுபட, அவர் இரும்பு சாப்பிட ஆரம்பித்ததாக அவர் கூறியுள்ளார். அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் கடுமையாக போராட வேண்டியிருந்தது.

நோயாளியை காப்பாற்ற, மருத்துவர் அவருக்கு மிகவும் நுணுக்கமான அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அவரது வயிற்றுக்குள் சுமார் ஒரு கிலோ இரும்பு பொருட்கள் வெளியே வந்தன. இதெல்லாம் எப்படி சாத்தியம் என்று மருத்துவரால் கூட புரிந்து கொள்ள முடியவில்லை. நோயாளியின் வயிற்றில் இருந்து, மருத்துவர்கள் ஆணி, திருகுகள் போன்ற பல சிறிய இரும்பு பொருட்களை வயிற்றில் இருந்து அகற்றினர். இவை அனைத்தையும் எடை போட்டு பார்த்ததில், அது சுமார் ஒரு கிலோவாக இருந்தது.

ALSO READ | கழிப்பறையில் ‘திடீர்’ பிரசவம்; ‘உள்ளே’ விழுந்த சிசு இறந்த சோகம்..!!

'நான் இவ்வளவு இரும்பு சாப்பிட்டேன் என்று எனக்குத் தெரியாது' என கூறிய அந்த நபர் லிதுவேனியாவில் உள்ள க்ளைப்தா பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த நபருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. அதிலிருந்து விடுபட, மது அருந்த வேண்டும் என்ற தூண்டுதலை கட்டுப்படுத்த, சிறிய இரும்புத் துண்டுகளை சாப்பிடத் தொடங்கியதாக அவர் கூறினார்.

ALSO READ | Watch viral video: தீப்பிடித்து எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்..!!!

அவருக்கு பலமுறை வயிற்று பகுதி ஸ்கேன் செய்து பரிசோதிக்கப்பட்டது. தற்போது அந்த நபரின் உயிருக்கு ஆபத்தில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனினும் அவரது வயிற்றின் உடல் பகுதி, இரும்பு மற்றும் நகங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது ஸ்கேன் மூலம் தெரியவந்துள்ளது. இரும்பின் மிகச்சிறிய துண்டுகளும் வயிற்றில் இருந்து வெளியேறி விட்டதா இல்லையா என்பதை அறிய பலமுறை ஸ்கேன் செய்யப்பட்டதாக மருத்துவர்கள் கூறினர். அந்த நபர் இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். 

ALSO READ | Viral Photos: மலைப்பாம்பு இரத்த வாந்தி எடுப்பதை பார்த்திருக்கிறீர்களா..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News