CORONA DRUG: கொரோனாவுக்கான மருந்து சுறாவில் இருக்கிறதா? ஆய்வில் தகவல்

சுறாவில் இருக்கும் புரதங்களைக் கொண்டு கொரோனா எதிர்ப்பு மருந்தைக் கண்டுபிடிக்கலாம் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 17, 2021, 05:30 PM IST
CORONA DRUG: கொரோனாவுக்கான மருந்து சுறாவில் இருக்கிறதா? ஆய்வில் தகவல் title=

2019 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் தொடங்கிய கொரோனா வைரஸ், பல்வேறு மாறுதல்களுடன் உலகை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸைக் கட்டுபடுத்த பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், கொரோனா திரிபுகளை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த வைரஸை முழுமையாக கட்டுபடுத்தக்கூடிய அரிய மருந்தை ஆய்வாளர்கள் கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவின் விஸ்கான்சின் - மாடிசன் பல்கலைக்கழகம் நடத்தியுள்ள ஆய்வில், சுறாவில் இருக்கும் புரதங்களைக் கொண்டு சார்ஸ் கோவிட் 2 மற்றும் அதன் தொடர்புடைய மாறுதல்களை, மனித உயிரணுக்களைப் பாதிக்காமல் தடுக்க உதவும் புதிய வகை மருந்தை உருவாக்க முடியும் என்பதை கண்டறிந்துள்ளனர்.

ALSO READ | Omicron Alert: சர்வதேச அளவில் அதிகரிக்கும் ஒமிக்ரான்! இங்கிலாந்தில் பாதிப்பு தீவிரம்!

இதற்கான சாத்தியக்கூறுகளும், மருந்துகளை உருவாக்குவதும் மிக எளிய நடைமுறை என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். நேச்சர் கம்யூனிக்கேஷன்ஸ் இதழில் இந்த ஆய்வு வெளியாகியுள்ளது. இருப்பினும், சுறாவின் புரதங்களை மனிதர்களிடம் இதுவரை சோதிக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆய்வாளர்கள் கொடுத்துள்ள விளக்கத்தில், சுறாக்களின் ஆன்டிபாடிகளில் இருந்து பெறப்பட்ட புரதங்கள், மனித ஆன்டிபாடிகளின் பத்தில் ஒரு பங்கு எனக் கூறியுள்ளனர். வி.என்.ஏ.ஆர் என அழைக்கப்படும் அவை, தொற்று நோயை தடுக்கும் திறனை மேம்படுத்துவதாக கூறியுள்ள ஆய்வாளர்கள், மனிதர்களில் தோன்றுவதற்கு தயாராக பல கொரோனா வைரஸ்கள் இருப்பதாகவும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சார்ஸ் கோவிட் 2 வைரஸூக்கு எதிராக சுறாக்களில் இருந்து பெறப்பட்ட வி.என்.ஏ.ஆர் புரதங்களை கொண்டு அவர்கள் பரிசோதனை செய்ததில், மனித உயிரணுக்களை பாதிக்காமல் திறம்பட செயல்பட்டதை கண்டறிந்தனர். ஒமிக்ரான் பரவலுக்கு முன்பே இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் நடத்தப்பட்டாலும், புதிய மாறுப்பாட்டிற்கு எதிராக சுறாவின் புரதம் செயல்படும் என்ற ஆரம்ப கட்ட சோதனைகள் மூலம் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எதிர்காலத்தில் மனிதர்களிடையே பரவும் இதுபோன்ற பிறழ்வு வைரஸ்களுக்கு, சுறாக்களிடம் இருந்து மருந்து பெற முடியும் என நம்பும் ஆய்வாளர்கள், புற்றுநோய் செல்களுக்கு எதிராக அவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.

ALSO READ | North Korea: பாப் இசையை கேட்டதற்காக 7 பேருக்கு பொதுவில் பொது மரண தண்டனை..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR 

Trending News