வைரல் வீடியோ: சோப்பு போட்டு குளிக்கும் ராஜா நாகப்பாம்பு

கொடிய விஷமுள்ள ராஜ நாகப்பாம்புக்கு ஒருவர் சோப்பு, ஷாம்பு போட்டு குளிக்க வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனை பார்த்து இணைய உலகம் வியப்படைந்துள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 15, 2023, 07:06 PM IST
  • சோப்பு போட்டு குளிக்கும் நாகப்பாம்பு
  • ராஜ நாகத்தின் வீடியோ இணையத்தில் வைரல்
  • வீடியோவை நீக்க வேண்டும் என வலியுறுத்தல்
வைரல் வீடியோ: சோப்பு போட்டு குளிக்கும் ராஜா நாகப்பாம்பு  title=

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே பாசப் பிணைப்புகள் இருப்பது உண்மை தான். ஆனால், கற்பனை செய்துகூட பார்க்க முடியாத, இதெல்லாம் எப்படி சாத்தியம் என்று நினைக்கக்கூடிய வகையில் ஒரு வீடியோ வெளியாகி நெட்டிசன்களை கவர்ந்துள்ளது. பாம்பை வைத்து வித்தை காண்பித்து பார்த்திருப்பீர்கள். ஆனால் அது சோப்பு சாம்பு போட்டு குளிப்பதை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? இதோ இப்போது வைரலாகியிருக்கும் வீடியோவில் நிச்சயம் பார்ப்பீர்கள். அதுவும் விஷம் இல்லாத பாம்பெல்லாம் இல்லை, கொடிய விஷம் உடைய ராஜ நாகப்பாம்பு. கேட்கும்போதே உங்களுக்கு பீதி ஏற்பட்டால் அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால் அது நடந்திருக்கிறது.

மேலும் படிக்க | வைரல் வீடியோ: மிகப்பெரிய நீர் யானையை கொடூரமாக வேட்டையாடும் சிங்கம்..!

பாம்பு இனங்களைப் பொறுத்தவரை விஷம் உள்ளவை, விஷம் இல்லாதவை என இருந்தாலும் அவற்றில் கொடிய விஷம் கொண்ட பாம்பு இனங்கள் விரல் விட்டு எண்ணிவிடலாம். அதிலும் முதன்மை இடத்தில் இருப்பது இந்த ராஜநாகப்பாம்புகள் தான். அதனை பிடிப்பது என்பதே கின்னஸில் போட வேண்டிய விஷயம். ஆனால் அதனையும் பிடித்து பழக்கப்படுத்தி குளிக்க வைப்பது என்பதெல்லாம் சினிமா கிராபிக்ஸ்களில் நடந்தால் தான் உண்டு என எண்ணுபவர்கள் மத்தியில் இதனை சாத்தியப்படுத்தி காட்டியிருக்கிறார் ஒருவர். 

வைரலாகியிருக்கும் அந்த வீடியோவில் குளியல் ரூமில் இருக்கும் பாம்புக்கு தண்ணீரை ஊற்றி குளிக்க வைக்கிறார். மிக நீளமாக இருக்கும் அந்த பாம்பு அந்த ரியாக்ஷனும் இல்லாமல் குளிக்கிறது. அதன் பிறகு தான் வேடிக்கையே இருக்கிறது. பாட்டிலில் இருக்கும் சோப்பை எடுத்து நுரை ததும்ப அதற்கு போட்டுவிடுகிறார் அந்த நபர். பாம்பும் ஏதும் செய்யாமல் ஜாலியாக போட்டுக் கொள்கிறது. அதன்பிறகு தேய்த்து குளித்துவிடுகிறார். இந்த வீடியோ தான் இப்போது யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.  

வீடியோவை பார்த்த பலரும் வியப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் கண்டனமும் தெரிவித்துள்ளனர். பாம்புகளுக்கு சோப்பு போட்டு குளிக்க வைக்கும் வீடியோவை வெளியிட்ட அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இது சமூகத்தில் தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்திவிடும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிலர் பாம்புக்கே சோப்பு போடுற நீ பெரிய கில்லாடி தான்யா என கிண்டலும் அடித்துள்ளனர்.

மேலும் படிக்க | Viral Video: பறக்க மட்டும் இல்லை... குட்டிகரணமும் போடுவேன்... அசத்தும் புறா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News