இணையத்தை கலக்கும் மைதானத்துக்குள் தோனி செய்த காரியம் -SeePic!

இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, பேட்டிங் செய்யும் வீரர்களுக்கு தோனி தண்ணீர் கொண்டுவந்த புகைப்படம் வைரளாகி வருகிறது!!

Last Updated : Jun 30, 2018, 05:23 PM IST
இணையத்தை கலக்கும் மைதானத்துக்குள் தோனி செய்த காரியம் -SeePic!  title=

இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, பேட்டிங் செய்யும் வீரர்களுக்கு தோனி தண்ணீர் கொண்டுவந்த புகைப்படம் வைரளாகி வருகிறது!!

அயர்லாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு டி-20 போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. முதல் டி-20 போட்டியில் ஏற்கெனவே, இந்தியா வெற்றி பெற்றிருந்த நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

நேற்றைய போட்டியில் மூத்த வீரர் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. அதனால், இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, பேட்டிங் செய்யும் வீரர்களின் கிட்பேக்கை சுமந்தபடி மைதானத்துக்கு வந்தார் தோனி. மேலும், வீரர்களுக்கு தண்ணீரும் கொண்டுவந்து கொடுத்தார். 

பொதுவாக அணியில் இடம்பிடித்த புதிய வீரர்களே இந்த வேலைகளைச் செய்வார்கள். இதனையடுத்து, தோனி கிட்பேக் கொண்டு வரும் புகைப்படமும், தண்ணீர் கொடுக்கும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. இதை கண்ட ரசிகர்கள், அவரை புகழ்ந்துவருகின்றனர்!

 

Trending News