துவங்கியது IPL டிக்கெட் விற்பனை; மைதானத்தில் குவியும் ரசிகர்கள்!

IPL 2019 தொடருக்கான டிக்கெட் விற்பனை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று துவங்கியது!

Last Updated : Mar 16, 2019, 01:15 PM IST
துவங்கியது IPL டிக்கெட் விற்பனை; மைதானத்தில் குவியும் ரசிகர்கள்! title=

IPL 2019 தொடருக்கான டிக்கெட் விற்பனை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று துவங்கியது!

இந்தியாவில் இந்த ஆண்டு எப்ரல் முதல் மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் பாதுகாப்புக் காரணங்களால் இந்தியாவில் 12-வது IPL போட்டிகளை நடத்துவதில் பிரச்சனைகள் ஏற்பட்டன. 

இந்த ஆண்டுக்கான IPL போட்டிகள் தென் ஆப்பிரிக்கா அல்லது துபாயில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே இதேப்போன்று கடந்த 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகள் பாராளுமன்றத் தேர்தலின் போது வெளிநாடுகளில் IPL போட்டிகள் நடத்தப்பட்டன. எனினும் இந்தாண்டு BCCI இந்தியாவிலேயே IPL போட்டிகள் நடைபெறும் என அறிவித்து இந்திய ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.
 
இந்நிலையில் இம்மாத இறுதியில் IPL போட்டிகள் தொடங்க இருக்கின்றன. 

முதல் போட்டி சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸுக்கும் இடையில் நடைபெறவுள்ளது. 23-ஆம் தேதி தொடங்க இருக்கும் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை சென்னை சேப்பாக்கத்தில் இன்று தொங்கியது.
 
டிக்கெட்டை வாங்க ரசிகர்கள் இரவு முதல் நீண்ட வரிசையில் காத்து நின்று டிக்கெட்டுகளை வாங்கி சென்றனர்.  சென்னை போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூபாய் 1300-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2500,5000,15000 ஆகியவைகளிலும் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னை போட்டிக்கான டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்கும் போட்டிக்கான டிக்கெட் BookMyShow-வில் கிடைக்கும் என ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன் படி இன்று (மார்ச் 16) துவங்கி ஆன்லைனிலும் ரசிகர்கள் டிக்கெட்டுகளை பெறலாம்.

Trending News