வாட்ஸ் அப்பில் வந்துள்ள 5 புதிய மாற்றங்கள்!

வாட்ஸ் அப்பின் சமீபத்திய அப்டேட்டின்படி, வாட்ஸ் ஆப் குழுக்களில் இதுவரை 512 பேர் இருக்கலாம் என்கிற வரம்பு தற்போது 1024 ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

1 /5

டேப்லெட்டில் வாட்ஸ் அப் அதன் வெர்ஷனை கொண்டுவர முடிவு செய்துள்ளது, இதன்மூலம் பீட்டா சோதனையாளர்கள் வாட்ஸ் அப் கணக்கை டேப்லெட்டில் பயன்படுத்தலாம்.  whatsapp for tablet ஐ புதிய இன்-ஆப் பேனர் மூலம் அறிமுகப்படுத்த வாட்ஸ்அப் முடிவெடுத்துள்ளது.  

2 /5

வாட்ஸ் அப்பில் குழு உரையாடல்களை ஒழுங்கமைக்க, சுற்றுப்புறம், பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பணியிடங்கள் போன்ற பல கம்யூனிட்டிகளை ஒரே குடையின் கீழ் அமைக்கும் செயல்முறையை வாட்ஸ் அப் அனைவருக்கும் வழங்கவிருக்கிறது.  

3 /5

வாட்ஸ் அப் குழுவில் இன்-சாட் வாக்கெடுப்பு அறிமுகமாகிறது, வாக்கெடுப்பை உருவாக்கியவர் 12 விதமான ஆப்ஷன்களை அதில் வழங்கலாம், குழுவிலுள்ள உறுப்பினர்கள் எத்தனை ஆப்ஷன்களுக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்.  

4 /5

வாட்ஸ் அப் மூலம் செய்யப்படும் வீடியோ அழைப்பில் இனிமேல் 32 நபர்கள் வரை இணைந்து உரையாட முடியும், இதன்மூலம் பயனர்கள் பெரிய அளவிலான குழுக்களை உருவாக்கி உரையாட முடியும்.  

5 /5

வாட்ஸ் அப் குழுவில் இதுவரை 256 நபர்கள் மட்டுமே இருந்த நிலையில், பின்னர் அதன் வரம்பை 512 ஆக உயர்த்தியது.  இப்போது வாட்ஸ் அப்பின் சமீபத்திய அப்டேட்டின்படி, மொத்தம் குழுக்களில் 1024 பேர் இருக்கலாம் என்று உயர்த்தப்பட்டுள்ளது.