குழந்தைகள் முன் பெற்றோர் செய்யவே கூடாத விஷயங்கள்

Parenting Tips Tamil : குழந்தைகள் முன் பெற்றோர் செய்யும் செய்யக்கூடாத விஷயங்கள் அவர்களின் நடத்தையில் எதிரொலிக்கிறது. 

குழந்தைகள் பெற்றோரை தங்கள் முதல் முன்மாதிரியாகப் பார்க்கிறார்கள் மற்றும் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்கிறார்கள். பெற்றோர்கள் எதைச் செய்வதைப் பார்த்தாலும், அதை விரைவாகப் பின்பற்றத் தொடங்குவார்கள். 

 

1 /8

எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் முன், சிந்தனையுடன் நடந்துகொள்வது மிகவும் முக்கியம். உங்களுடைய சில கெட்ட பழக்கவழக்கங்கள் குழந்தைகளுக்கு முன்னால் செய்தால், அவற்றை தவறான திசையில் கொண்டு செல்லலாம்.   

2 /8

இதனால், பெற்றோர்கள் தங்கள் சிறு குழந்தைகள் முன் செய்யக்கூடாத விஷயங்கள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் கோபத்தை உங்கள் பிள்ளைகளுக்கு முன்னால் திரும்பத் திரும்ப வெளிப்படுத்தினால் அல்லது கத்தினால் நாளடைவில் உங்களின் கோபத்தை அவர்கள் பொருட்படுத்தமாட்டார்கள்.

3 /8

நீங்கள் எப்படி ரியாக்ட் செய்கிறீர்களோ அப்படியே கோபமாக உங்களுக்கு பதிலையும் கொடுக்க தொடங்குவார்கள். குழந்தைகள் தங்கள் உணர்ச்சிகளை சரியாகக் கட்டுப்படுத்த கற்றுக்கொள்வதற்கு பெற்றோர்கள் பொறுமை மற்றும் அமைதியைக் காட்டுவது முக்கியம். 

4 /8

சிறிய குழந்தைகள் புதிய விஷயங்களை மிக விரைவாகக் கற்றுக்கொள்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் கணவன் மனைவி இருவரும் சண்டை போட்டுக் கொள்ளக்கூடாது. தவறான வார்த்தைகளை பேசக்கூடாது. அந்த வார்த்தைகளை அவர்களும் பேச கற்றுக் கொள்வார்கள். 

5 /8

பெற்றோர் குழந்தைகள் முன் சண்டையே போடக்கூடாது. அது அவர்களை மனதளவில் பெரியதாக பாதிக்கும். எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் குழந்தைகள் முன் அதனை பேசாமல் இருப்பது நல்லது.

6 /8

பெற்றோராகிய நீங்களே ஒழுக்கமின்மையை கடைபிடித்தால் குழந்தைகளும் அதனை கடைபிடிக்க தொடங்குவார்கள். நீங்கள் ஒழுக்கமாக இருந்தால் குழந்தைகளும் ஒழுக்கமாக இருப்பார்கள். 

7 /8

காலையில் எழுவது முதல் ஓர் இடத்துக்கு கிளம்புவது வரை நீங்கள் சரியாக எல்லா விஷயங்களையும் செய்தால் குழந்தைகளும் அதனை பின்பற்ற கற்றுக் கொள்வார்கள்.  

8 /8

நீங்கள் குழந்தைகள் முன் பொய் சொன்னால், அவர்களும் பொய் சொல்ல ஆரம்பிப்பார்கள். அதனால், எப்போதும் நேர்மையாகவும் உண்மையாகவும் நடந்து கொள்ளுங்கள்.