Road Accidents: நெடுஞ்சாலையில் விபத்துகளை குறைப்பதில் தமிழ்நாடு முதலிடம்

இந்தியாவில் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பை குறைக்க அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக ஐந்து ஆண்டுகளில் நாட்டின் சாலை நீளம் 17% அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சாலை நீளம் 17% அதிகரித்துள்ளது என்றால், வாகனங்கள் வாங்கும் அளவும் சுமார் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது. பிடிஐ செய்திப்படி, நெடுஞ்சாலையில் விபத்துகளை குறைப்பதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

Also Read | ஈமு கோழி மோசடி: 10 ஆண்டுகள் சிறை, ரூ 2.40 அபராதம்

1 /5

இந்தியாவில், 2015 முதல் 2019 வரை, சாலைகளின் நீளம் 17 சதவிகிதம் அதிகரித்திருந்தாலும், பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் அளவு 41 சதவிகிதம அதிகரித்துள்ளன

2 /5

நாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 2019 இல் 41 சதவீதம் அதிகரித்து 29.6 கோடியாக அதிகரித்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 21 கோடியாக இருந்தது. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் தரவுகள் இந்தத் தகவலை சொல்கின்றன  

3 /5

சாலை விபத்துகளில் இறப்பு எண்ணிக்கை குறைந்தது. இது 2015 ல் 1,46,113 ல் இருந்து 10 சதவீதம் குறைந்து 2019 ல் 1,31,714 ஆக குறைந்தது.

4 /5

தரவுகளின்படி, 2015-20 காலத்தில் விபத்துகளைக் குறைப்பதில் தமிழகத்தின் செயல்திறன் சிறப்பாக உள்ளது. அதைத் தொடர்ந்து முறையே கேரளா, குஜராத் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.

5 /5

2020 மற்றும் 2030 க்கு இடையில் மொத்த சாலை விபத்து இறப்புகளை 50 சதவிகிதம் குறைக்க அரசு உறுதி பூண்டுள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் திட்டத்தை அரசு தயாரித்துள்ளது