அதிர்ச்சியூட்டும் வீடியோ: முதியவர் சடலத்தை சுமந்து சென்ற பெண் எஸ்ஐ!

ஆந்திரப் பிரதேசத்தில் முதியவர் ஒருவரின் சடலத்தை பெண் எஸ்ஐ சுமந்து சென்று இறுதி மரியாதை செய்யவும் உதவியது பலரின் பாராட்டுகளை பெற்றது.

1 /4

ஆந்திர பிரதேச (Andhra Pradesh) மாநிலத்தில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த காசிபக்கா நகராட்சியில், அதிவிக்கொத்துரு கிராமம் ஒன்று உள்ளது. இங்கு உள்ள விவசாய நிலத்தில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக காசிபக்கா காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

2 /4

அதன்பேரில், இரண்டு கான்ஸ்டேபிளுடன் உதவி ஆய்வாளர் சிரிஷா ஆதிவிகோட்டுரு கிராமத்துக்கு சென்றுள்ளார். சடலம் இருக்கும் வயல்பகுதியில் சாலை வசதி இல்லாததால் வாகனத்தை 2 கி,மீ. தொலைவில் நிறுத்திவிட்டு சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். அங்கு அந்த முதியவரின் சடலம் அழுகி துர்நாற்றம் வீச தொடங்கி இருந்தது. எனவே பலரும் சடலத்துக்கு அருகில் கூடச் செல்ல விரும்பவில்லை. 

3 /4

இறந்த முதியவர் அனாதையாக விடப்பட்டு அங்கு சுற்றித்திரிந்த பிச்சைக்காரர் என தெரியவந்தது. பின்னர் எஸ்.ஐ.ஸ்ரீசா (Women Police), தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் முதியவர் உடலை இடு காட்டிற்கு எடுத்துச்சென்று இறுதி சடங்கு செய்ய முடிவு செய்தார். முதியவரின் உடலை எடுத்துச் செல்ல கிராம மக்களிடம் உதவி கோரினார். யாரும் உதவிக்கு வராத நிலையில், தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒருவரின் உதவியுடன், முதியவர் உடலை தனது தோளில் சுமந்து கொண்டு 2 கி.மீ. வரை தூக்கிச் சென்று தனது சொந்த பணத்திலிருந்து முதியவருக்கு இறுதி சடங்குகளை செய்தார்.     

4 /4

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் (Social Media) வெளியாகி எஸ்ஐ சிரிஷாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. முதியவர் உடலை பெண் எஸ்.ஐ. , தனது தோளில் சுமந்து செல்லும்  வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.