Republic Day 2021: குடியரசு தினத்திற்கான முழு ஒத்திகை புகைப்படங்களில்…

கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் குடியரசு தினத்தை கொண்டாட இந்தியா தயாராகி வருகிறாது. பங்கேற்பாளர்கள் வண்ணமயமான ஆடைகளுடன் முழு ஒத்திகை செய்தனர்.

இந்திய குடியரசு தினக் கொண்டாட்டங்கள் மிகவும் பிரபலமானவை. கோலாகலமான கொண்டாட்டங்களை கொரோனா மட்டுப்படுத்தியது, விருந்தினர்கள் வருகையை தான் கட்டுப்படுத்தியது, கொண்டாட்டங்களை அல்ல. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்ப குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது.

Also Read | அயோத்தி ராமர் கோவிலில் ராவணனுக்கும் சிலை வைக்கவேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை

1 /6

அணிவகுப்பு பாதை: இந்த ஆண்டு, குடியரசு அணிவகுப்பு ராஷ்டிரபதி பவனில் இருந்து தொடங்கி இந்தியா கேட்டில், விஜய் சவுக் வழியாக ராஜ்பாத், அமர் ஜவான் ஜோதி, இந்தியா கேட் மற்றும் திலக் மார்க் வழியாக செல்கிறது.

2 /6

DTEA பள்ளி மாணவர்கள், 25 ஆண்டுகளுக்கு பிறகு குடியரசு தின விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.  

3 /6

நிகழ்ச்சிகள் குறைந்தது: கொடிய கொரோனா வைரஸ் பரவிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையால் இந்த ஆண்டு குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட பார்வையாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 150,000. இந்த ஆண்டு 25,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஊடக பணியாளர்களின் ஒதுக்கீடும் 100 என்ற அளவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

4 /6

ரஃபேல் போர் விமானங்கள்: முதன்முறையாக, சமீபத்தில் பெறப்பட்ட ரஃபேல் போர் விமானங்களும் இடம்பெறும்.

5 /6

கொரோனா விளைவு: வரலாற்று ரீதியாக, குடியரசு தின விழா பெரிய அளவிலான நிகழ்ச்சிகள் மற்றும் அணிவகுப்புடன் கொண்டாடப்படுகிறது. இருப்பினும், இந்த ஆண்டு தொற்றுநோயால் நாடு ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்துவிட்டதால், இந்த நாள் வழக்கமான பெரிய கொண்டாட்டங்களாக இருக்காது.

6 /6

விருந்தினர் இல்லை: ஆரம்பத்தில் இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜான்சன், குடியரசு தின விழாவில் பிரதான விருந்தினராக கலந்து கொள்ள இருந்தார். கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, அவர் தனது வருகையை ரத்து செய்ய வேண்டியிருந்தது. விருந்தினர் இல்லாமல் குடியரசு தினத்தை இந்தியா முதன்முறையாக இந்த ஆண்டு தான் கொண்டாடுகிறது.