இனி கஞ்சா போதைப்பொருள் அல்ல என ஐநா சபை அறிவிப்பு..!

ஐ.நா. போதைப்பொருள் மருந்துகள் ஆணையம் (சி.என்.டி) வெளியிட்டுள்ள ஒரு புதிய அறிவிப்பில் கஞ்சாவை சர்வதேச அளவில் ஒழுங்குபடுத்தும் விதத்தில் மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது. அதன் அறிவிப்பில் கஞ்சா மிகவும் ஆபத்தான போதைப்பொருள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Dec 04, 2020, 14:38 PM IST

ஐ.நா. போதைப்பொருள் மருந்துகள் ஆணையம் (சி.என்.டி) வெளியிட்டுள்ள ஒரு புதிய அறிவிப்பில் கஞ்சாவை சர்வதேச அளவில் ஒழுங்குபடுத்தும் விதத்தில் மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது. அதன் அறிவிப்பில் கஞ்சா மிகவும் ஆபத்தான போதைப்பொருள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 /6

மரிஜுவானா மற்றும் இதர போதைப்பொருள் குறித்த உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளை மறுஆய்வு செய்வதில், சி.என்.டி கஞ்சாவை நீக்குவதற்கான முடிவை அறிவித்துள்ளது.

2 /6

சி.என்.டி யின் 53 உறுப்பு நாடுகள் கஞ்சாவை மிகக் கொடிய போதைப்பொருள் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்தன. இதன் மூலம் 59 ஆண்டுகளாக நீடித்து வரும் கடும் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு, மருத்துவ நோக்கங்களுக்காக அதன் பயன்பாட்டை ஊக்கப்படுத்தியுள்ளது.

3 /6

முன்னதாக ஐ.நா. போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்களில் கஞ்சாவை நீக்குவது குறித்து ஆறு பரிந்துரைகளை 2019 ஜனவரியில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டது.

4 /6

சி.என்.டி யின் மார்ச் 2019 அமர்வின் போது இந்த திட்டங்கள் முதலில் வாக்களிக்க திட்டமிடப்பட்டிருந்தாலும், பல நாடுகள் ஒப்புதல்களைப் படிப்பதற்கும் அவற்றின் நிலைகளை வரையறுப்பதற்கும் அதிக நேரம் கோரியுள்ளன என்று செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

5 /6

தற்போது, ​​50-க்கும் மேற்பட்ட நாடுகள் மருத்துவ கஞ்சா திட்டங்களை ஏற்றுக்கொண்டன. கனடா, உருகுவே மற்றும் 15 அமெரிக்க மாநிலங்கள் அதன் பொழுதுபோக்கு பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்கியுள்ளன.

6 /6

இந்நிலையில் ஐநாவின் இந்த அறிவிப்பு, மருத்துவத் துறையில் கஞ்சாவின் பயன்பாட்டை அதிகரிக்க ஊக்கமளிக்கும் என இதற்கு ஆதரவாக உள்ள நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.