சனியின் வக்ர நிவர்த்தி.... கவலை வேண்டாம்... இனி எல்லாம் சுகமே..!!

சனி வக்ர நிவர்த்தி பலன்கள்: நவகிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது ராசியை மாற்றிக் கொள்கிறது. இதைத் தவிர, கோள்கள் அவ்வப்போது வக்ர நிலையையும் அடையும். ஜூன் மாதத்தில் சனி கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்த நிலையில், இப்போது நவம்பரில் வக்ர நிவர்த்தி அடையும். இதனால் சில ராசிகளின் துன்பம் நீங்கி, இன்பம் பிறக்கும்.

சனியின் வக்ர நிவர்த்தி காரணமாக சில ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் பதவி உயர்வு கிடைக்கும் என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள். இந்நிலையில், சனியின் அருள் பார்வையை பெறும் மூன்று ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்...

1 /8

சனி பகவான்: ஜோதிடத்தில், கர்மாவிற்கு ஏற்ற பலனைக் கொடுக்கும் சனி பகவான் நீதிக்கடவுளாக கருதப்படுகிறார். கடந்த ஆண்டு கும்பத்தில் சனி பெயர்ச்சி ஆன நிலையில், கடந்த 2024 ஜூன் 29ம் தேதி வக்ர பெயர்ச்சி அடைந்துள்ள சனி பகவான், நவம்பர் 15ம் தேதி வக்ர நிலையில் இருந்து வக்ர நிவர்த்தி அடைவார்.

2 /8

கிரகங்கள் வக்ர நிலையில் இருக்கும் போது, குறிப்பிட்ட கோள்களின் ஆற்றல் அபரிமிதமாக இருக்கும் என்பதால், சாதாரண நிலையில் இருப்பதை விட அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள். இதனால், கெடு பலன்கள், சுப பலன்கள் இரண்டுமே அளவிற்கு அதிகமாக இருக்கும்.

3 /8

சனியின் வக்ர நிவர்த்தியினால், குறிப்பிட்ட சில ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெரிதும் கை கொடுக்கும். செல்வ வளம் குறையாமல் இருக்கும். சனியின் அருளைப் பெறும் அதிர்ஷ்ட ராசிகள் எவை, இதனால் எந்த வகையில் பலன் பெறுவார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்...  

4 /8

ரிஷபம் ராசி: சனி பகவான் அருளால், வேலை மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் பெறலாம். உங்கள் அறிவாற்றல் அதிகரிக்கும். இலக்குகளில் முழுமையாக கவனம் செலுத்துவீர்கள். வேலையில், தொழில், வியாபாரத்தில் சாதகமான பலன்கள் உண்டாகும். பதவி உயர்வு தேடி வரும். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

5 /8

மிதுன ராசி: சனி தேவனின் வக்ர நிவர்த்தி காரணமாக, பண வரவு அதிகரித்து, பொருளாதார நிலை வலுப்பெறும். மனதில் மகிழ்ச்சியும் திருப்தியும் இருக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்கள் தங்கள் கனவை நிறைவேற்ற முடியும். ஆன்மீகத்தின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.

6 /8

கும்ப ராசி: சனியின் வக்ர நிவர்த்தி காரணமாக, சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும். இந்த நேரத்தில், திருமணமாகாதவர்களுக்கு திருமண உறவு கை கூடி வரக்கூடும். பண வரவு அதிகரிக்கும். வாழ்க்கையில் நிம்மதி பிறக்கும்.

7 /8

சனி வக்ர பெயர்ச்சி: கடந்த ஜூன் 29ம் தேதி முதல் சனி தேவன் வக்ர நிலை அடைந்துள்ள நிலையில், இதனால், உலகம் முழுவதும் எல்லைப் பதற்றம் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் நிச்சயமற்ற நிலை நிலவும் என்றும், போராட்டம், ஊழல், மோசடி, வேலை நிறுத்தம், குழப்பம் மற்றும் வன்முறை சம்பவங்கள் அதிகரிக்கலாம் எனவும் ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.