இன்னும் 8 நாட்களே, இந்த ராசிக்காரர்களின் தலைவிதியை சனி மாற்றுவார்

சனி பெயர்ச்சி ஜூலை 2022: பொதுவாக சனிப் பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி வருகிற ஜூலை 12, 2022 அன்று, சனி தனது சொந்த ராசியான கும்பத்தை விட்டு வெளியேறி மகர ராசியில் நுழைகிறார். சனி தற்போது கும்ப ராசியில் சஞ்சரித்து பின்னோக்கி செல்கிறது. இந்த சனிப் பெயர்ச்சி 3 ராசிக்காரர்களுக்கு பொன்னான நாட்களைக் கொண்டு வரும். அவர்கள் தொழில்-வியாபாரத்தில் வலுவான முன்னேற்றத்தைப் பெறுவார்கள், மேலும் நிறைய பணமும் பெறுவார்கள். எனவே சனி எந்தெந்த 3 ராசிகளில் அனுகூலமாக இருக்கப்போகிறார் என்பதை தெரிந்து கொள்வோம். 

1 /3

ரிஷபம்: மகர ராசியில் சனியின் சஞ்சாரம் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பொன்னான நாட்களின் தொடக்கத்தைக் குறிக்கும். இதுவரை எந்தப் பணிகள் முடங்கிக் கிடக்கின்றனவோ, அவை விரைவாக முடிக்கப்படும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். பதவி உயர்வு-அதிகரிப்புக்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. எதிர்பாராத பண ஆதாயம் உண்டாகும். வியாபாரிகள் பெரிய ஆர்டர்களைப் பெறுவார்கள். புதிய வேலையைத் தொடங்கத் திட்டமிடுபவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சிறப்பாக இருக்கும். தனிமையில் இருப்பவர்களுக்கு வாழ்க்கைத்துணை கிடைக்கும். எல்லா விஷயங்களிலும் அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும்.

2 /3

தனுசு: சனியின் ராசி மாற்றம் தனுசு ராசிக்காரர்களுக்குப் பணவரவு தரும். வருமானம் அதிகரிப்பது மட்டுமின்றி, முடங்கிய பணமும் கிடைக்கும். முதலீடு மூலம் லாபம் உண்டாகும். எதிர்பாராத பண ஆதாயங்களைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகளும் உள்ளன. கூட்டு முயற்சியில் ஈடுபட இது நல்ல நேரம். தொழிலில் ஆதாயம் உண்டாகும்.

3 /3

மீனம்: பிற்போக்கான சனி மகர ராசியில் நுழைவதால் மீன ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். தொழிலில் பெரிய வெற்றியை அடைய முடியும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். முதலீடு செய்வதற்கும் இது சரியான நேரம். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை அதிகரிக்க முதலீடு செய்யலாம். நாள்பட்ட நோய், சர்ச்சைகள் விலகும்.   (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)